‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் ‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் ...  தொடர் சாதனை புரியும் இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சாதனை புரியும் இந்திய பங்குச் சந்தைகள் ...
‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2019
02:08

புதுடில்லி : ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை தனியார்மயமாக்கினாலும், அதன் ஊழியர்களுக்கு, ஓராண்டு வரை வேலைக்கான உத்தரவாதத்தை பெற்றுத் தருவது என, அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.


இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அப்படி விற்கும்போது, அதன் ஊழியர்களுக்கு, ஓராண்டு வரை வேலைக்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என, ஒப்பந்தம் செய்து கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக, விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஒரு சரத்தும் சேர்க்கப்படும். ஏர் இந்தியாவில் தற்போது, 11 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.


இந்நிறுவனத்தை விற்பதற்கான அரசின் இரண்டாவது முயற்சியாகும் இது. இதற்கு முன், கடந்த ஆண்டில் நிறுவனத்தின், 76 சதவீத பங்குகளை விற்பதற்கு ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.ஆனால், 24 சதவீத பங்குகளை அரசு தன் பிடியில் வைத்துக்கொள்ளும் என்பதை முதலீட்டாளர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.தற்போது, இரண்டாவது முயற்சியில் அரசு இறங்கி உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை விற்று விடும் முயற்சியில் அரசு தீவிரமாக இருக்கிறது.

ஏர் இந்தியா விமான ஊழியர்களில், 37 சதவீதம் பேர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)