பதிவு செய்த நாள்
28 நவ2019
02:11
மும்பை : உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி, 750 கோடி ரூபாயை திரட்டும் பொருட்டு, டிச., 2ல், பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளதாக தெரிவித்து உள்ளது.
இந்த பங்கு வெளியீடு, டிச., 4ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் ஒரு பங்கின் விலை, 36 முதல், 37 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, உஜ்ஜிவன் வங்கி, கடந்த ஆகஸ்ட் மாதம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்திருந்தது. அக்., 22ம் தேதி, செபியிடமிருந்து அனுமதி கிடைத்தது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, வங்கியின் எதிர்கால மூலதன தேவைகளை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வங்கி, உஜ்ஜிவன் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்ததாகும். உஜ்ஜிவன் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம், சிறு நிதி வங்கியை ஆரம்பிக்க ரிசர்வ் வங்கியிடமிருந்து உரிமம் பெற்றதும், 2016ல் பங்கு வெளியீட்டுக்கு வந்தது.இப்போது, அதன் துணை நிறுவனமான உஜ்ஜிவன் சிறு நிதி வங்கியும், பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|