பதிவு செய்த நாள்
29 நவ2019
04:20
புதுடில்லி: நாட்டின் தங்கம் இறக்குமதி, கடந்த ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான கால கட்டத்தில், 9 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது; இதன் மதிப்பு, 1.27 லட்சம் கோடி ரூபாய்.
இதுவே, கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான காலத்தில், இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு, 1.40 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.தங்கம் இறக்குமதி குறைந்ததன் காரணமாக, மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 6.82 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 8.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த நிதியாண்டில் தங்கத்தின் இறக்குமதி, 3 சதவீதம் சரிந்து, 2.36 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
தங்கத்தை மிகப்பெரும் அளவில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியாவாகும். நாட்டின் நகைத் துறையின் தேவை, இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு, 800 முதல், 900 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது.வர்த்தக பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றில், தங்கம் இறக்குமதியின் எதிர்மறையான தாக்கத்தைக் குறைக்க, இந்த ஆண்டு பட்ஜெட்டில், தங்கத்துக்கான இறக்குமதி வரியை, 10 சதவீதத்திலிருந்து, 12.5 சதவீதமாக அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|