பதிவு செய்த நாள்
30 நவ2019
01:59
புதுடில்லி : வீட்டுக் கடன்களை வழங்கி வரும், ‘ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பம் செய்துள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 1,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனத்தின் சரிவை அடுத்து, பல்வேறு வீட்டுக் கடன் வசதி நிறுவனங்கள், நிதிச் சிக்கலில் தவித்து வரும் நிலையில், ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் நிறுவனம், நிதி திரட்டுவதற்காக பங்குச் சந்தைக்கு வருவது, குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.இந்நிறுவனம், 400 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 1,100 கோடி ரூபாய்க்கு நிறுவனர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.
மும்பையைச் சேர்ந்த இந்நிறுவனம், 2010ல் துவங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனத்துக்கு, 60 கிளைகள் உள்ளன. மார்ச் மாத நிலவரப்படி, 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ‘ஆக்சிஸ் கேப்பிட்டல், கிரெடிட் சுயிஸ் செக்யூரிட்டீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல்’ ஆகிய நிறுவனங்கள், இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகிக்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|