பதிவு செய்த நாள்
30 நவ2019
02:02
புதுடில்லி : டி.எச்.எப்.எல்., எனும், ‘திவான் ஹவுஸிங் பைனான்ஸ்’ நிறுவனத்தின் மீது, திவால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க, ரிசர்வ் வங்கி, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் விண்ணப்பம் செய்துள்ளது.
பணப் புழக்க நெருக்கடி, முறைகேடு, கடன் பாக்கி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான, டி.எச்.எப்.எல்., மீது திவால் நடவடிக்கை எடுக்கும் முயற்சியில், ரிசர்வ் வங்கி தீவிரமாக இறங்கி உள்ளது.முதற்கட்டமாக, இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவை கலைத்துவிட்டு, அதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது, ரிசர்வ் வங்கி.ரிசர்வ் வங்கி சார்பில், இந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்ய, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆர்.சுப்பிரமணிய குமார் நியமிக்கப்பட்டார்.
மேலும், அவருக்கு உதவும் வகையில் மூன்று உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவையும், ரிசர்வ் வங்கி நியமித்தது.டி.எச்.எப்.எல்., நிறுவனம் ஜூலை மாத நிலவரப்படி, வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, 83 ஆயிரத்து, 873 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|