பதிவு செய்த நாள்
01 டிச2019
23:44
கமாடிட்டி சந்தை
கச்சா எண்ணெய்
கடந்த வார ஆரம்ப நாட்களில், கச்சா எண்ணெய் விலை, சற்று அதிகரித்து வர்த்தகமாகி வந்தது. இருப்பினும், வார இறுதி நாளான, வெள்ளியன்று, சர்வதேச சந்தையில் ஒரு பேரலுக்கு, 3 அமெரிக்க டாலர் வரை விலை சரிந்தது.
ஈராக் நாட்டின் உள்நாட்டு கலவரம் மற்றும் அதன் காரணமாக பிரதமர் பதவி விலக உள்ளதாக அறிவித்தது ஆகியவை, பெரிய அளவில் எண்ணெய் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது. ரஷ்யா மற்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின்கூட்டமைப்பு ஆகியவற்றின்
கூட்டம், இந்த வாரஇறுதியில், ரஷ்யாவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், எண்ணெய் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை சீராக மேற்கொண்டு,
எண்ணெய் விலை சரிவை கட்டுக்குள் கொண்டுவர, உறுப்பு நாடுகள் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் முந்தைய ஒப்பந்தப்படி, தினசரி எண்ணெய் உற்பத்தி குறைப்பு, வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் மூன்று மாதங்களுக்கு உற்பத்தி குறைப்பை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, இந்த வாரத்தைப் பொறுத்தவரை, நடக்கவிருக்கும் கூட்டத்தில் எடுக்கப்படும்
முடிவுகளின்போக்கில், சந்தையின் ஏற்றத் தாழ்வுகள் அமையும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச எரிசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஒன்பது மாதங்களில், தேவைக்கு அதிகமான உற்பத்தி நடைபெற்று, எண்ணெய் உற்பத்தி நாடுகளின் இருப்பு மற்றும் மீதம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் தேவை குறைந்து, அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து வரும் சூழலின் அடிப்படையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓபெக்
நாடுகளின் எண்ணெய் தேவையானது, 2020ல் குறைந்து, தினசரி தேவை, 28 மில்லியன் பேரல் ஆக இருக்கும் என்றும், தற்போதைய நாடுகளின் மொத்த தினசரி உற்பத்தி, 30 மில்லியன் பேரல் ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் தினசரி உற்பத்தியில், அமெரிக்கா, அதன் ஷெல் எண்ணெய் உற்பத்தியுடன் சேர்த்து பார்த்தால், முதலிடம் வகிக்கிறது. இரண்டாவதாக சவுதி அரேபியாவும், 3 வதாக
ரஷ்யாவும் உள்ளன.அமெரிக்காவில் இயங்கிவரும் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது, 892 குழாய்கள் செயல்பட்டுவருகின்றன.
மார்ச், 2015ம் ஆண்டுக்கு பிறகு இதுவே அதிகமாகும்.
சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மொத்த உற்பத்தி,
ஒட்டுமொத்த உலகின் நுகர்வு தேவையில், 60 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.
தங்கம் வெள்ளி
சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை கடந்த மாதம் துவக்கத்திலிருந்தே சரிந்து வர்த்தகம் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை, 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை, 1 அமெரிக்க டாலர் வரை உயர்ந்து காணப்பட்டது. இந்த விலை உயர்வு, நம் உள்நாட்டு பொருள் வாணிப
சந்தையிலும், ஆவண சந்தையிலும் பிரதிபலித்தது. தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு
பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, அமெரிக்க அரசின் வட்டி விகித கொள்கையில்
ஏற்பட்ட மாற்றம் முக்கியமான காரணமாகும்.
அமெரிக்க மத்திய வங்கி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக, கடந்த ஜூலை
மாதத்தில், வட்டி விகிதத்தை குறைத்தது. அதை தொடர்ந்து மூன்று முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டது.வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, அரசுகருவூலங்களின் ஆதாயம் குறையும். இதன் காரணமாக, முதலீட்டாளர்களின் முதலீடுகள் தங்கம் மீதுஅதிகரிக்கும்.
இதற்கு மாறாக, வட்டி விகிதம் அதிகரிக்கப்படும்போது தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்று அரசு சார் கருவூலங்களில் முதலீடு செய்வர்.எனவே, வட்டி விகிதம் குறித்த கொள்கை மாற்றங்கள், பொருள் வாணிப சந்தையில் அனைத்து கமாடிட்டி பொருட்களின் விலையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இரண்டாவதாக, வர்த்தக போர் காரணமாக, ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தம்ஆகியவற்றின் காரணமாக, தங்கத்தின் விலையில் சமீபகாலமாக ஏற்றம் காணப்பட்டது. ஆனால், தற்போது இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுகளில்,
முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.பேச்சு இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், வர்த்தக மோதலை குறைத்துக் கொள்ளவும், இறக்குமதி வரி விதிப்பை விலக்கிக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை சரியத்
துவங்கின.
கடந்த மாதத்தில் மட்டும், 1 அவுன்ஸ் தங்கம், 70 அமெரிக்க டாலர் வரை சரிந்துள்ளது.
இருப்பினும், சீனா, ஹாங்காங் இடையே நடந்த கலவரம், அமெரிக்காதலையீடு போன்றவற்றால், மேற்கூறிய வர்த்தகஒப்பந்தத்தில் இழுபறி நிலவி வருகிறது. இதனால், கடந்த வாரத்தின் இறுதி நாளான வெள்ளியன்று,தங்கம் விலை சற்று உயர்ந்து வர்த்தகம் ஆனது.வரும் நாட்களிலும், அமெரிக்கா – சீனா ஆகிய இரு நாடுகளின் நிகழ்வுகளை பொறுத்தே
தங்கம் விலையின் போக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பு
கடந்த மூன்று மாதங்களாக, செம்பு விலை தொடர்ந்து சரிந்து வர்த்தகமாகி வருகிறது. இதற்கு, உலகின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சரிவு முக்கியமான காரணமாகும்.அடுத்து, செம்பு அதிகம் பயன்படுத்தப்படும் சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி மந்தம் ஒரு காரணம். மேலும், வர்த்தக போர் காரணமாக சீனா, அமெரிக்காஆகிய நாடுகளின்
ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கும்பாதிப்பும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
தற்போது, அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக மோதல் குறித்த சுமுக பேச்சு துவங்கியுள்ள நிலையில், அதில் ஏற்படும் மாற்றங்கள், செம்பு விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் அதிக அளவில் செம்பு உலோகத்தை
தொழிற்சாலைக்கு பயன்படுத்தும் நாடு, சீனாவாகும்.
அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்வைத்தே பெரும்பாலான கமாடிட்டி
பொருட்களின் விலை மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போதைய சூழலில், சீனாவின் ஜி.டி.பி., வளர்ச்சி குறையும் என்ற அச்சம்காரணமாக, செம்பு விலை சரிந்து வருவது
குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|