பதிவு செய்த நாள்
01 டிச2019
23:46
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, முந்தைய மூன்று வாரங்களில், அதிக ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லாமல் வர்த்தகமாகி வந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் வியாபாரம் ஆரம்பித்தநாள் முதல், சந்தை உயர்ந்து வந்தது. வியாழனன்று, புதிய வரலாற்று உச்சத்தை அதாவது, 12,150 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் ஆனது.இருப்பினும்,
வார இறுதி நாளான வெள்ளியன்று, நாட்டின் 2வது காலாண்டுக்கான,
ஜி.டி.பி., வளர்ச்சி விகித அறிவிப்பு வெளிவர இருந்த நிலையில், வளர்ச்சி
விகிதம் குறைந்து காணப்படும் என்ற எதிர்பார்ப்பில், சந்தை சரிந்து
வர்த்தகம் நடைபெற்றது. எதிர்பார்த்தது போலவே, ஜி.டி.பி., குறித்த
முடிவும் அமைந்தது.
மத்திய புள்ளியியல் துறை அறிவிப்பின்படி, நாட்டின்இரண்டாம்
காலாண்டு, ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம் சரிந்து, 4.5 சதவீதமாக
குறைந்திருந்தது. இதற்கு முந்தைய காலாண்டில் இது, 5 சதவீதமாக
இருந்தது குறிப்பிடத்தக்கது.மஹாராஷ்டிராவில் தேர்தல்
முடிவுகள்வெளியாகி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையிலும், அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல்கள் இருந்து வந்தன.
இந்நிலையில்,
புதிய கூட்டணி அமைக்கப்பட்டு, ஆட்சி அமைக்கப்பட்டதன்
காரணமாகவும் சந்தை உயர்ந்து, வர்த்தகம் நடைபெற்றது.
கடந்த, 28ம்
தேதி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 10 லட்சம் கோடி ரூபாய்
என்ற வரலாற்று உச்சத்தை அடைந்தது. இதையடுத்து, தற்போது உலக அளவில்
மிகப்பெரிய
எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக உயர்ந்துள்ளது.மும்பை
பங்குச் சந்தை குறியீட்டு எண், சென்செக்ஸ், தொடர்ந்து ஐந்து
வாரங்களாக உயர்ந்து, புதிய வரலாற்று உயர்வான, 41163
புள்ளிகளை கடந்த
வாரம்எட்டியது. தேசிய பங்குச் சந்தையில் உள்ள துறை சார்ந்த
குறியீட்டு எண்கள் அனைத்தும், கடந்த வாரம் உயர்ந்து வர்த்தகம் ஆகின.
இதில் குறிப்பிடத்தக்க வகையில் பொதுத்துறை வங்கிகள் குறியீட்டு
எண், 4 சதவீதம்
அளவுக்கு உயர்ந்தது. ஊடகத் துறை குறியீட்டு எண், 7 சதவீதம் சரிந்து வர்த்தகம்
நடைபெற்றது.சர்வதேச
சந்தையில், அமெரிக்க நாணயத்தின் மதிப்பு உயர்ந்ததன் காரணமாக,
ரூபாயின் மதிப்பு, கடந்த வாரம் மீண்டும் சரிந்தது. தற்போது, 1
அமெரிக்க டாலர், 71.73
ரூபாயாக உள்ளது.
இந்த வாரத்தைப்
பொறுத்தவரை, மேலும் சில முக்கிய பொருளாதார காரணிகள் வெளிவர உள்ளன.
அதன் அடிப்படையில் சந்தையின் போக்கு அமையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக, கடந்த மாதம்
விற்பனையான வாகனங்கள் குறித்த புள்ளி விபரம் வெளிவருகிறது.
நாட்டில்
வாகனங்கள் விற்பனை, கடந்த ஜனவரி முதல் சரிந்து வந்த நிலையில்,
அக்டோபர் மாதத்தில் சிறிய அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது.அடுத்து,
நவம்பர் மாத தொழில் துறை வளர்ச்சி விகிதம் குறித்த விபரம் வெளிவர
உள்ளது. வரும் வியாழன் அன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித
கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ரெப்போ வட்டி விகிதம், 0.25
சதவீதம் அளவுக்கு குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி
வருகிறது.
இந்த ஆண்டில் இதுவரை, 5 முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் நிப்டியைப் பொறுத்தவரை, அதன் சப்போர்ட், 11972 மற்றும் 11850 புள்ளிகள் ஆகும். ரெசிஸ்டென்ஸ், 12135 மற்றும் 12190 புள்ளிகள் ஆகும்.
முருகேஷ் குமார்
murukesh.kumar@choiceindia.com
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|