பதிவு செய்த நாள்
04 டிச2019
00:00
புதுடில்லி:'மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை, ஜனவரி மாதம் முதல் உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. தயாரிப்புக்கு தேவையான பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என, இந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
இது குறித்து, மாருதி சுசூகி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த ஓராண்டு காலமாகவே, நிறுவனத்தின் வாகன தயாரிப்புக்கு தேவைப்படும், பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து வந்துள்ளது. இதனால், நிறுவனத்துக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பை சரிக்கட்டும் வகையில், பல்வேறு வாகனங்களின் விலையை, ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நிறுவனம் ஆளாகியுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு, வாகனங்களுக்குஇடையே வேறுபடும்.இவ்வாறு மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.தற்போது இந்நிறுவனம், நுழைவு நிலை காரான, ‘ஆல்டோ’விலிருந்து பிரீமியம் காரான, ‘எக்ஸ்.எல்., 6’ வரை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் டில்லி எக்ஸ்ஷோரூம் விலை, 2.89 லட்சத்திலிருந்து, 11.47 லட்சம் ரூபாய் வரை ஆகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|