பதிவு செய்த நாள்
04 டிச2019
23:51
புதுடில்லி:கடந்த நவம்பரில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, மூன்று மாதங்களுக்கு பின் அதிகரித்து உள்ளது.
‘நிக்கி
– மார்க்கிட்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல்,
சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட்,
வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு
மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில்
கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த
நவம்பரில் சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி –
ஐ.எச்.எஸ்.,
மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 52.7 புள்ளிகளாக
உயர்ந்துள்ளது. இது, அக்டோபரில்,
49.2 புள்ளிகளாக இருந்தது.இருப்பினும்
இது, நீண்டகால சராசரியான, 54.2 புள்ளிகளை விட குறைவாகவே
இருக்கிறது. உற்பத்தி மற்றும் சேவை துறை இரண்டும் சேர்ந்த கலப்பு
பி.எம்.ஐ., குறியீடு, 49.6 புள்ளிகளிலிருந்து, 52.7 புள்ளிகளாக
உயர்ந்துள்ளது. இதுவும் நீண்டகால சராசரிக்கு கீழே தான் உள்ளது.
நவம்பரில்
சேவைகள் துறையின் வளர்ச்சிக்கு, புதிய வணிக ஒப்பந்தங்கள், வேகமான
வேலைவாய்ப்பு உருவாக்கம், வணிக நம்பிக்கை அதிகரிப்பு ஆகியவை
காரணமாக
அமைந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|