பதிவு செய்த நாள்
04 டிச2019
23:56
புதுடில்லி:கூகுளின் தாய்நிறுவனமான,
‘ஆல்பபெட்’ நிறுவனத்தின் தலைமை செயல்
அதிகாரியாக, சுந்தர் பிச்சை
நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, உலகின் சக்தி வாய்ந்த
கார்ப்பரேட் தலைவர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார், சுந்தர்
பிச்சை.
இனி, ‘கூகுள், ஆல்பபெட்’ ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும், தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சையே இருப்பார்.ஆல்பபெட்டின்
தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவர் பொறுப்புகளை வகித்து வந்த, அதன்
இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின், தங்கள் பதவியி
லிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
சிறந்த நபர்
இவர்கள் இருவரும் பதவியிலிருந்து விலகினாலும், நிறுவனத்தின் உறுப்பினர்களாக
தொடருவர் எனக் கூறப்பட்டுள்ளது.கூகுள் நிறுவனத்தை மறுசீரமைக்கும் முயற்சிகளில் ஒன்றாக, 2015ம் ஆண்டு, ஆல்பபெட் துவங்கப்பட்டது.இதையடுத்து,
இந்நிறுவனம் கூகுளின் தாய் நிறுவனமானது. ஆல்ப பெட்டின் தலைமை
செயல் அதிகாரியாக லாரி பேஜும்,
தலைவராக செர்கே பிரினும் பொறுப்பு
ஏற்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.தற்போது, ஆல்பபெட் பொறுப்புகளிலிருந்து பேஜ் மற்றும் பிரின் விலகி உள்ளனர்.
புதிய
முயற்சிகளை துவங்குவதற்காக, இந்த முடிவை எடுத்திருப்பதாக
தெரிவித்திருக்கும் இந்த இருவரும், நிர்வாகக் குழு
உறுப்பினர்களாகவும், பங்குதாரர்களாகவும், இணை
நிறுவனர்களாகவும் தொடர்ந்து செயல்படப் போவதாகத் தெரிவித்து
உள்ளனர்.
புதிய பொறுப்பை ஏற்க இருக்கும் சுந்தர் பிச்சை குறித்து, இவர்கள் இருவரும் குறிப்பிட்டு உள்ளதாவது:ஆல்பபெட்
நிறுவனத்தை இன்னும் திறம்படச் செயல்பட வைக்க நிறைய
வழிகள்
இருக்கும்போது, பொறுப்புகளை நாங்களே வைத்திருக்க எப்போதும்
நினைத்ததுஇல்லை.சுந்தர் பிச்சை அனைத்து தரப்பினரிடமும், தொழில்
நுட்பம் தொடர்பான ஆர்வத்தை துாண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
பெருமை மிகுந்த பெற்றோர் போல அன்பையும், அறிவுரையையும்
கொடுத்துவிட்டு,
துாரத்திலிருந்து விஷயங்களை கவனித்துக்
கொள்வோம்.நிறுவனத்தை வழிநடத்தி செல்ல, சுந்தர் பிச்சையைக் காட்டிலும் சிறந்த நபர் வேறு யாரும் இருக்க முடியாது.ஆல்பபெட்
மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இனி இரண்டு நிர்வாக இயக்குனர்களும், ஒரு தலைவரும் தேவையில்லை.இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மகிழ்ச்சி
இது குறித்து, சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளதாவது:நான் தொடர்ந்து கூகுள் மீது அதிக கவனம் செலுத்துவேன். கூகுளை ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக்க முயற்சிப்போம். மேலும்,
தொழில் நுட்பத்தின் மூலம் பெரிய சவால்களை சமாளிப்பதில், ஆல்பபெட்
நிறுவனத்தின் நீண்ட கால கவனம் குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன். பேஜ்
மற்றும் பிரின் ஆகிய
இருவருக்கும் நன்றி.இவ்வாறு சுந்தர் பிச்சை மின் அஞ்சலில் தெரிவித்து உள்ளார்.
வளர்ச்சியின் வரலாறு
* மதுரையில் பிறந்து, 47வது வயதில் இந்த உலக உயரத்தை தொட்டுள்ளார்
* ஐ.ஐ.டி., காரக்பூர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், வார்ட்டன் வணிக கல்லுாரி
ஆகியவற்றில் படித்தவர்
* கூகுளில் சேர்வதற்கு முன், ‘மெக்கின்ஸி’ நிறுவனத்தில் ஆலோசகர் பணி
* 2004ல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார்
* 2015ல் கூகுளின் தலைமை செயல் அதிகாரி பணி
* ‘கூகுள் குரோம்’ உருவாக்கத்தில் பெரும்பங்களிப்பு
* ‘செஸ்’ விளையாடுவது பிடித்தமான ஒன்று
*
ஆல்பபெட் நிறுவன பங்குகள் விலை அதிகரித்து, சுந்தர் பிச்சையின்
நியமனத்துக்கு, பங்குச் சந்தைகள் பச்சைக் கொடி காட்டியுள்ளன.
அதிகலாபத்தில் ‘ஆல்பபெட்’
அண்மைக்
காலத்தில் உலகில் மிகவும் மதிப்பு வாய்ந்த நிறுவனமாக, ‘ஆல்பபெட்’
உருவாகி உள்ளது. 2018ல் இதன் வருவாய், 7.92 லட்சம் கோடி ரூபாய். லாபம்
மட்டும், 2.16 லட்சம் கோடி ரூபாய்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|