பதிவு செய்த நாள்
05 டிச2019
23:58
புதுடில்லி:இந்திய வங்கிகளுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் தேவை என, ‘பிட்ச்’ நிறுவனம் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகளுக்கு, அடுத்த நிதியாண்டில் அவற்றின் கடன் வளர்ச்சியை அதிகரிக்கவும், வாராக் கடன்களை ஈடு செய்யவும், 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் தேவைப்படுவதாக, மதிப்பீட்டு நிறுவன மான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.மேலும், மோசமான வசூல் மற்றும் காலம் கடந்த ஏற்பாடுகள் ஆகிய வற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் வங்கி துறை, மந்தமான பொருளாதார நிலையால், மேலும் இடர்ப்பாடுக்கு ஆளாகும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போதைய மூலதன தேவைகள் மற்றும் வங்கிகளின் தொடரும் பலவீனமான செயல்திறன் ஆகியவை காரணமாக, பிட்ச் ரேட்டிங்ஸ், இந்திய வங்கிகள் குறித்த எதிர்மறையான மதிப்பீட்டை மாற்றிக் கொள்ளவில்லை.பொதுத்துறை வங்கிகளில் கடனை வசூலிப்பதில் தாமதங்கள், மோசமான வருவாய் ஆகியவை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதன் கடன் வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள, அவற்றுக்கு மேலும் மூலதனம் தேவைப்படுகிறது எனவும் பிட்ச் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|