பதிவு செய்த நாள்
07 டிச2019
00:27
புதுடில்லி:வாகன உதிரிபாகங்கள் துறையின் விற்றுமுதல், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இதுவரை இல்லாத வகையில் சரிவை கண்டுள்ளது என, வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கமான, ஏ.சி.எம்.ஏ., தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டில், ஜூலை வரையில், ஒரு லட்சம் தற்காலிக ஊழியர்கள் பணியிழப்பை சந்தித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.இது குறித்து, சங்கம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்தில், இந்த துறையின் விற்றுமுதல், 1.79 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 10.1 சதவீதம் சரிவாகும். இந்த காலகட்டத்தில் விற்றுமுதல், 1.99 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.மேலும், மந்த நிலை காரணமாக, 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் வரை முதலீட்டு இழப்பையும் இந்த காலகட்டத்தில் சந்தித்துள்ளது.
வாகன துறை, கடந்த ஓராண்டு காலமாகவே மந்த நிலையில் உள்ளது. வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு துறையை பொறுத்தவரை, வாகனங்கள் உற்பத்தி தற்போது, 15 முதல், 20 சதவீதம் வரை குறைந்துவிட்டதால், அதன் பாதிப்பு இத்துறையிலும் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழப்பை சந்தித்து உள்ளனர்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|