பதிவு செய்த நாள்
07 டிச2019
23:49
மும்பை:‘டிஜிட்டல்’ பணப் பரிமாற்ற முறைகளில் ஒன்றான, என்.இ.எப்.டி., மூலம், வரும், 16ம் தேதி முதல், 24 மணி நேரமும், அனைத்து நாட்களிலும் பணப் பரிமாற்றம் செய்யலாம் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இனி, என்.இ.எப்.டி., முறையில், 16ம் தேதி முதல், 24 மணி நேரமும், விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், பணப் பரிமாற்றம் செய்யும் வசதி
அறிமுகம் ஆகிறது.தற்போது இந்த முறையில் வார நாட்களில், காலை, 8:00 முதல் இரவு, 7:00 மணி வரையிலும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில், காலை, 8:00 முதல்
மதியம், 1:00 மணி வரையும், பணப் பரிமாற்றம் குறிப்பிட்ட காலப் பகுதிகளில் செட்டில்
செய்யப்படுகிறது.
இந்நிலையில், 24 மணி நேரமும், அனைத்து நாட்களிலும் பரிமாற்றம் செய்யும் வகையில் மாற்றம் கொண்டு வருவதால், தேவையான பணம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொள்ளுமாறு வங்கிகளை அறிவுறுத்தி உள்ளது, ரிசர்வ் வங்கி.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|