பதிவு செய்த நாள்
07 டிச2019
23:50
மும்பை:அன்னிய செலாவணி இருப்பு, தொடர்ந்து அதிகரித்து வருவதாக, ரிசர்வ் வங்கி
தெரிவித்துள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நவம்பர், 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு வாரத்தில் அன்னிய செலாவணி இருப்பு, 17 ஆயிரத்து, 885 கோடி ரூபாய் அதிகரித்து, 32.48 லட்சம் கோடி ரூபாயாக, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதுவே,, இதற்கு முந்தைய வாரத்தில், 2,498 கோடி ரூபாய் அதிகரித்து, 32.30 லட்சம் கோடி
ரூபாயாக இருந்தது.மதிப்பீட்டு வாரத்தில், வெளிநாட்டு நாணய சொத்துக்கள் அதிகரித்தது, இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்தது. வெளிநாட்டு நாணய சொத்துக்கள் மதிப்பு மட்டுமே, 30.19 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் இருப்பு, மதிப்பீட்டு காலத்தில் குறைந்துள்ளது. தங்கம் இருப்பானது, 1,065 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்து, 1.92 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|