பதிவு செய்த நாள்
07 டிச2019
23:53
புதுடில்லி:‘வோடபோன் ஐடியா’ நிறுவனத்தின் நிலை, ‘பார்தி ஏர்டெல்’ நிறுவனத்துக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருப்பதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் குறித்த வழக்கில், 14 ஆண்டு காலத்துக்கான நிலுவைத் தொகையை மூன்று மாதங்களில் கட்ட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதில், வோடபோன் ஐடியா, 44 ஆயிரத்து, 150 கோடி ரூபாயும்; ஏர்டெல் நிறுவனம், 28 ஆயிரத்து, 450 கோடி ரூபாயும் செலுத்த வேண்டியதுள்ளது.
இவை இரண்டும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், ஒருவேளை நீதிமன்றம் அவற்றை தள்ளுபடி செய்தால், அது இரு நிறுவனங்களுக்கும் சிக்கல் ஏற்படும்.எனினும், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் வோடபோன் ஐடியா நிறுவனத்தால் இந்த தொகையை திரட்டுவது கடினமாக இருக்கும் என்கிறது, ‘மோர்கன் ஸ்டான்லி’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை.
பார்தி ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே, 21 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் திரட்டுவதற்கு, நிர்வாகக் குழுவின் ஒப்புதலை பெற்றுவிட்டது.தீர்ப்பின்படி, நிலுவைத் தொகையை முழுதாக
செலுத்துவதாக இருந்தாலும்அல்லது ஒருபகுதி தள்ளுபடி செய்யப்பட்டாலும் அல்லது
குறிப்பிட்ட காலத்தில் செலுத்த வேண்டும் என்றாலும், ஏர்டெல் சமாளிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
சாதகமான தீர்ப்பு வந்தால், திரட்டப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியை, ஏற்கனவே இருக்கும் பிற கடன்களை தீர்த்துக் கொள்ள அதற்கு கைகொடுக்கும்.எப்படிப் பார்த்தாலும் வோடபோன் ஐடியாவை விட, சாதகமான நிலையில் ஏர்டெல் இருக்கிறது என்கிறது ஆய்வறிக்கை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|