பதிவு செய்த நாள்
09 டிச2019
00:10
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம் சர்வதேச சந்தையில், சுமார் ஏழு சதவீதம் உயர்ந்து இருந்தது. இது, கடந்த ஜூன் மாதத்திற்கு பின் ஏற்பட்ட அதிகப்படியான வார உயர்வாகும்.
கடந்த வார இறுதி நாட்களான, வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு மற்றும் ரஷ்யா ஆகியவை இணைந்து பங்கேற்ற கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை முன்கூட்டியே கணித்து, வார ஆரம்பம் முதலே விலை அதிகரித்து வந்தது.
கூட்டமைப்பு நாடுகள், விலை சரிவை கட்டுக்குள் கொண்டுவர, ஒருங்கிணைந்து, தினசரி சுமார், 5 லட்சம் பேரல்கள் உற்பத்தி குறைப்பினை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன.இதனால், சந்தையில் கச்சா எண்ணெய் விலை
மளமளவென உயர ஆரம்பித்தது.இதற்கு முன் இருந்த ஒப்பந்தப்படி, தினசரி உற்பத்தி குறைப்பு, 12 லட்சம் பேரல்கள் ஆக இருந்தது. இது ஒட்டுமொத்த உலக உற்பத்தியில்,
1.7 சதவீதமாகும்.
தற்போது புதிய அறிவிப்பு காரணமாக, உற்பத்தி குறைப்பு மேலும் அதிகரிக்கும். இதனால்,
சந்தையில் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சத்தில் விலைகள் உயர்ந்தது.அமெரிக்காவின் பொருளாதார காரணிகளில் ஒன்றான, அரசு துறையில் புதிதாக பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு வெளியானது.இதில், நவம்பர்
மாதத்தில், அதற்கு முந்தைய, 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது. இது எதிர்பார்த்ததை விட அதிகமாகும்.
இதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சி உயரும்; அதனால் தேவை அதிகரிக்கும் என்ற
கண்ணோட்டத்திலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வர்த்தகம் ஆனது.ஒபெக் நாடுகளின், எண்ணெய் தேவையானது, 2020ம் ஆண்டில் குறைந்து, தினசரி தேவை, 2.8 கோடி பேரலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தினசரி மொத்த உற்பத்தி, சுமார் 3 கோடி பேரல்கள் ஆகும்.
உலக அளவில் தினசரி உற்பத்தியில், அமெரிக்கா, அதன் ஷெல் எண்ணெய் உற்பத்தியுடன் சேர்த்து பார்த்தால், முதலிடம் வகிக்கிறது. இரண்டாவதாக,சவுதி அரேபியாவும் 3 வதாக, ரஷ்யாவும் உள்ளன.அமெரிக்காவில் இயங்கிவரும் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது, 892 குழாய்கள் செயல்பட்டு வருகின்றன. மார்ச் 2015ம் ஆண்டுக்கு பின் இதுவே அதிகமாகும். சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும்
அமெரிக்கா ஆகிய நாடுகளின் மொத்த உற்பத்தி, ஒட்டுமொத்த உலகின் நுகர்வு தேவையில்,
60 சதவிகிதத்தை பூர்த்தி செய்கிறது.
தங்கம் வெள்ளி
சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த வார ஆரம்பத்தில் அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, அமெரிக்காவின் பொருளாதார காரணிகளில் ஒன்றான, அரசு துறையில் புதிதாக பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு வெளியானது.இதில், நவம்பர் மாதத்தில், அதற்கு முந்தைய பத்து மாதங்களில் இல்லாத
அளவுக்கு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இது எதிர்பார்த்ததை விட அதிகமாகும்.
இந்த எண்ணிக்கை அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி நேர் பாதையில் போவதை சுட்டிக்காட்டியது. இதனால், பொருள் வாணிப சந்தையில், அமெரிக்க நாணய குறியீடு அதிகரித்தது. அதன் காரணமாகதங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்தது.சுமார், 10 ஆண்டுகளுக்குப் பின், இந்த ஆண்டில்இதுவரை, மூன்று முறை வட்டி விகிதத்தைஅமெரிக்க மத்திய வங்கி குறைத்து அறிவித்துள்ளது.
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட வர்த்தக மோதல் காரணமாக,
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குன்றியது. இதுவே வட்டி குறைப்புக்கு முக்கிய காரணமாகும்.தற்போது இரு நாடுகளுக்கு இடையே பேச்சு நடைபெறும் சூழலில், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் இந்த வாரம் செவ்வாய் மற்றும்
புதன் கிழமைகளில் நடைபெற உள்ளது. இதில் வட்டி விகிதம் தற்போது உள்ள அதே
நிலையில்மாற்றமில்லாமல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக வட்டி விகிதமும் தங்கமும் எதிர்மறையான போக்கினை கொண்டவை. வட்டி விகிதம் உயரும்போது அரசு மற்றும் அரசு சார்ந்த முதலீடுகளில் ஆதாயம் அதிகரிக்கும். இந்த சூழலில் முதலீட்டாளர்கள் அதன் மீது முதலீடுகளை அதிகரித்துக் கொள்வது வாடிக்கையாகும்.மாறாக வட்டி விகிதம் குறையும்போது,முதலீட்டாளர்கள் அதிக லாபமீட்டும் வேறு
பொருட்கள் மீது முதலீடு செய்வர். இதில் தங்கத்தின் மீதான முதலீடு முதலிடம் வகிக்கிறது.
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் பேசுகையில், சீனா, அமெரிக்கா இடையேயான வர்த்தக மோதல் குறித்து, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க தேர்தலுக்கு பின் முயற்சி
எடுக்கப்படும் என்றுஅறிவித்திருந்தார். இருப்பினும், சீன அரசு முதல்படியாக இறங்கிவந்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், சோயாபீன் மற்றும் பன்றி இறைச்சி மீதான இறக்குமதி வரியை விலக்கிக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
இதனால், இரு நாடுகளுக்கு இடையே இருந்து வரும் அசாதாரண சூழல் குறையும் என்ற அடிப்படையில், வரும் வாரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று சரிந்து வர்த்தகம் ஆக வாய்ப்பு உள்ளது.
செம்பு
செம்பு விலை, கடந்த வாரம் விலை உயர்ந்து வர்த்தகம் ஆனது. வார ஆரம்பம் முதலே உயர்ந்த போக்கில் தான் வர்த்தகம் ஆனது.சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடந்து
வரும் வர்த்தக மோதல் குறித்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு பலம் பெறும் என்ற
எதிர்பார்ப்பில், பொருள் சந்தையில், கனிமங்களின் விலையில் சிறிதளவு உயர்வு காணப்பட்டது.தற்போது முதல்கட்டமாக, சீனா இறங்கி வந்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் இருமுக்கிய பொருட்களுக்கு இறக்குமதி வரியை விலக்குவதாக அறிவித்துள்ளது.
இதனால் சந்தையில் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே உறவு சீரடையும் என்பதினாலும் செம்பு விலை உயர்ந்து காணப்பட்டது.உலக
அளவில், அதிக அளவில் கனிமங்கள் மற்றும் தொழிற்சாலை மூலதனப் பொருட்களை
உபயோகிப்பதில், சீனா முதலிடம் பிடிக்கிறது. எனவே, இந்த நாட்டின் ஏற்றுமதியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், கனிமங்களின் விலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|