பதிவு செய்த நாள்
10 டிச2019
00:39
மும்பை:நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., அதன் எம்.சி.எல்.ஆர்., வட்டியை, 10 அடிப்படை புள்ளிகள் குறைத்து அறிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
எஸ்.பி.ஐ., வட்டி விகிதத்தை குறைத்திருக்கும் நிலையில், வீடு, வாகனம் ஆகியவற்றுக்கான கடனுக்கான வட்டி குறையும்.புதிய வட்டி குறைப்பை அடுத்து, ஓராண்டுக்கான, எம்.சி.எல்.ஆர்., அடிப்படையிலான வட்டி, 8 சதவீதத்திலிருந்து, 7.90 சதவீதமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கியின் நிதிச் செலவு குறைவதை அடுத்து, அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், இந்த வட்டி குறைப்பை அறிவித்துள்ளதாக, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
அண்மையில் ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல், 5.15 சதவீதமே தொடரும் என, அறிவித்திருந்த நிலையில், எஸ்.பி.ஐ., வங்கி அதன், எம்.சி.எல்.ஆர்., உடன் இணைக்கப்பட்ட கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|