பதிவு செய்த நாள்
11 டிச2019
03:54
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, அதன் அனைத்து வாகனங்களின் விலையையும், அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:வாகன தயாரிப்புக்கு தேவைப்படும் பொருட்களின் விலை அதிகரித்துவிட்ட காரணத்தினால், அடுத்த மாதத்திலிருந்து அனைத்து வாகனங்களின் விலையும் உயர்த்தப்பட இருக்கிறது.
கார்களின் மாடல் மற்றும் பயன்படுத்தும் எரிபொருள் வகை ஆகியவற்றை பொறுத்து, விலை அதிகரிப்பு வேறுபடும். விரைவில் அது குறித்த தகவல் வெளியிடப்படும். இவ்வாறு ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள், ஜனவரியிலிருந்து வாகனங்களுக்கான விலையை உயர்த்தப் போவதாக அறிவித்து விட்டன.
இந்நிலையில் தற்போது, ஹூண்டாய் மோட்டார் நிறுவனமும் விலை உயர்வை அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து, பிற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் விலை உயர்வு குறித்து அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|