பழைய கம்ப்யூட்டர்களுடன் மல்லுகட்டும் நிறுவனங்கள்:மைக்ரோசாப்ட் நிறுவன ஆய்வறிக்கை சொல்லும் செய்திகள் பழைய கம்ப்யூட்டர்களுடன் மல்லுகட்டும் நிறுவனங்கள்:மைக்ரோசாப்ட் நிறுவன ... ...  உள்நாட்டு வாகன விற்பனை நவம்பரில் சிறிது சரிவு உள்நாட்டு வாகன விற்பனை நவம்பரில் சிறிது சரிவு ...
புதிய நிறுவனங்களுக்கு பழைய நிலங்கள் ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
03:55

தமிழக அரசின், நிலம் கையகப்படுத்தும் சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதால், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மட்டுமே, புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு, நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில், நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை, 2013ம் ஆண்டு மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.புதிய சட்டத்தில் இருந்து, மாநில அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டங்களான, மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்ற சட்டங்களுக்கு, விலக்கு பெறும் வகையில், 2015ல், 105 (அ) என்ற புதிய சட்ட பிரிவை, தமிழக அரசு சேர்த்தது.இந்த புதிய பிரிவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.
இது குறித்து, தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:நிலம் கையகப்படுத்தும் சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டதால், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த, 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.புதிய நிலங்களையும் கையகப்படுத்த முடியவில்லை. புதிய சட்டப் பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.இதனால், புதிதாக தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு, ஏற்கனவே கையகப்படுத்தி வைத்துள்ள நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)