பதிவு செய்த நாள்
11 டிச2019
03:59
புதுடில்லி:இந்தியாவில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் வணிகம், அடுத்த மூன்று ஆண்டுகளில், 50 சதவீதம் அதிகரிக்கும் என, டெல்ட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி மற்றும் ஆற்றல் நிர்வாக நிறுவனமான, டெல்ட்டா எலக்ட்ரானிக்ஸ், இது குறித்து தெரிவித்துள்ளதாவது:மூன்று, நான்கு ஆண்டு களுக்கு முன்பு, மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மின்சார கார் மாடல்களே இருந்தன. இப்போது குறைந்தபட்சமாக நான்கு மாடல் கார்களாவது இருக்கின்றன.நிறைய வாகன தயாரிப்பு நிறுவனங்கள், மின்சார கார்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.அத்தகைய கார்களை தயாரிப்பது அல்லது அதற்கு திட்டமிடுவதில் நிறைய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.வளர்ச்சிஇந்த சூழ்நிலையில், மின்சார கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் துறை மேலும் மேலும் வளர்ச்சி பெறும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
தற்போது, உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களான, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை, மின்சார கார்களை தயாரித்துள்ளன.ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த ஜூலையில், மின்சார எஸ்.யு.வி., கோனா காரை அறிமுகம் செய்தது.எம்.ஜி.,மோட்டார் இந்தியா நிறுவனம், ஜனவரியில் அதன் தயாரிப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம், அதன் வேகன் ஆர் மாடலில், 50 மின்சார கார்களை பரிசோதித்து வருகிறது.இருப்பினும், மின்சார கார்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், அரசாங்கத்தின் ஆதரவு குறைபாடுகள் ஆகியவற்றை காரணம் காட்டி, தற்போது வணிக ரீதியாக மின்சார காரை பொது பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை என, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
முதலீடுமென்மேலும் புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம் ஆகும்போது, மின்சார கார்களுக்கான சார்ஜிங் துறையும் வேகமெடுக்கும்.டெல்ட்டா எலக்ட்ரானிக்ஸ், இந்தியாவில் இதுவரை, 700 சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது. நிறுவனத்தின் மூன்றாவது தொழிற்சாலை, தமிழ்நாட்டில் துவங்கப்பட உள்ளது.
நிறுவனம், 2026ம் ஆண்டுக்குள், 3,600 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் 1,450 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரியில் அமைய இருக்கும் ஆலைக்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்துக்கும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.இப்போது தான் சூடு பிடிக்க துவங்கி இருக்கும் இந்த துறை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், 50 சதவீத வளர்ச்சியை காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|