பதிவு செய்த நாள்
15 டிச2019
23:59
இந்திய பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் ஒன்றாக ரியல் எஸ்டேட் விளங்குகிறது.
நாட்டின் ஜி.டி.பி.,யில் 6 முதல், 8 சதவீத பங்கு செலுத்தும் இந்த துறை,
வேலைவாய்ப்பு
உருவாக்கத்தில் இரண்டாவது இடம் வகிக்கிறது.
அண்மை
காலத்தில் சவாலான சூழலை இத்துறை எதிர்கொண்டு வரும்நிலையில்,
வரும், 2020ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் எதிர்பார்க்க கூடிய
முக்கிய போக்குகளை
வல்லுனர்கள் அடையாளம் கண்டுள்ளனர்:
தொழில்நுட்ப தாக்கம்:
ரியல் எஸ்டேட் துறையில், கட்டுமானம் மட்டும் அல்லாமல், வாங்கும் செயல்முறை,தகவல்களைஅணுகுவது
நவீனமயமாகியிருக்கிறது. வீடு வாங்குபவர்கள் நேரில் விஜயம்
செய்யாமல் டிஜிட்டல் முறையில் பார்வையிட உதவும் ஆக்மென்டட்
ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டிநுட்பங்கள் பிரபலமாக உள்ளன
வெளிநாட்டு முதலீடு:
முன்னணி நகரங்களில் ரியல் எஸ்டேட்திட்டங்கள், வெளிநாடு முதலீட்டை ஈர்த்து
வருகின்றன.வர்த்தக திட்டங்களில் அதிக ஆர்வம் இருக்கிறது. மேலும்ரியல் எஸ்டேட்
முதலீட்டு அறக்கட்டளை (ஆர்.இ.ஐ.டி.,)நிதிக்கு கிடைத்துள்ள ஆதரவால், இந்த வகை
முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நுகர்வோர் ஆர்வம்:
அண்மை காலத்தில் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் உத்தியைமாற்றிக்கொண்டுள்ளன. குறைந்த விலை வீடுகள் பிரிவில்நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. அரசு தரப்பில்அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு முக்கியத்துவம்
அளிக்கப்படும் நிலையில், இந்த போக்கு மேலும் தீவிரமாகும்
அரசு ஆதரவு:
தேக்க நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள்காரணமாக,
ரியல் எஸ்டேட் துறையில் பல திட்டங்கள் முடிக்கப்படாமல் தாமதமாகி
வருகின்றன. நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு உதவும் வகையில் அரசு
அறிவித்து 25 ஆயிரம் கோடி நிதி உதவி பெரும் ஊக்கமாக
அமைந்துள்ளது.
இதன் காரணமாக பல திட்டங்கள் புத்துயிர் பெற்று விரைந்து
முடிக்கப்படலாம்.
புதிய பிரிவுகள்:
அண்மை ஆண்டுகளில் ரியல் எஸ்டேட்துறையில்
புதிய பிரிவுகள் கவனத்தை ஈர்த்து
வருகின்றன. நகர்ப்புறத்தில்
கல்வி பயில வரும் மாணவர்களை மனதில் கொண்ட
ஸ்டூடண்ட் ஹவுசிங்
திட்டங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டு
பணியாற்றுவதற்கான, ‘கோ-வொர்கிங் ஸ்பேஸ்’ திட்டங்களும்
அதிகரிக்கும்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|