பதிவு செய்த நாள்
18 டிச2019
02:42
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி.,யை பொறுத்தவரை, மாதம் ஒன்றுக்கு, 1.1 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என, நிதியமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:நாட்டின், ஜி.எஸ்.டி., வரி வருவாய், இதுவரை எதிர்பார்த்ததை விட குறைவாகவே வசூல் ஆகியுள்ளது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், மீதம் உள்ள நான்கு மாதங்களில், 1.1 லட்சம் கோடி ரூபாய்க்கு குறையாமல் வசூல் செய்ய வேண்டும் என, நிதியமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.வரி வருவாயை அதிகரிக்கும் வகையில், வருவாய் துறை செயலர் அஜய் பூஷண், காணொலி காட்சி மூலம், வரித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன், ‘மீட்டிங்’ நடத்தி, நேரடி மற்றும் மறைமுக வரி வசூலை அதிகரிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்;
அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விடும்படியும் கூறியுள்ளார்.அதே சமயம், வரி வசூல் நடவடிக்கைகளின் போது, யாரையும், எந்த வகையிலும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடாது என்பது குறித்தும் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|