பதிவு செய்த நாள்
19 டிச2019
02:43
சென்னை : மத்திய கலால் மற்றும் சேவை வரி சட்டத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் திட்டமான, ‘சப்கா விஷ்வாஸ்’ வரும், 31ம் தேதி உடன் நிறைவடைகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி என்ற, ஜி.எஸ்.டி., சட்டம், 2017ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு முன், மத்திய கலால் மற்றும் சேவை வரி சட்டம் அமலில் இருந்தது.இந்த வரி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில், ஆயிரக்கணக்கில் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளுக்கு தீர்வு காண, மத்திய அரசு, ‘சப்கா விஷ்வாஸ்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் பயன் பெற, ‘ஆன்லைனில்’ விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது.இது குறித்து. ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:மத்திய கலால் மற்றும் சேவை வரியில் விதிக்கப்பட்ட வரி விதிப்புக்கு எதிராக, துறை ரீதியிலான மேல்முறையீடு செய்வர். இதையடுத்து, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வர்.இந்த திட்டம், 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்க தவறியோர் விரைவில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம். திட்டத்தின் அவகாசம் நீட்டிப்பு குறித்து, இதுவரை எந்த தகவல்களும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|