பதிவு செய்த நாள்
19 டிச2019
02:46
மான்ட்ரீல் : மெய்நிகர் நாணயத்துக்கான இணையதள சந்தை ஒன்றை நடத்தி வந்தவர் திடீரென இறந்துவிட, ‘பாஸ்வேர்டு’ உள்ளிட்டவை வேறு யாருக்கும் தெரியாத காரணத்தால், முதலீட்டாளர்களின் பல கோடி டாலர் முடங்கிக் கிடக்கிறது.
இந்நிலையில், சந்தையின் நிறுவனர் இறந்து போனதாக நாடகம் நடத்தி, பணத்தை எடுத்துக் கொண்டு விட்டனரோ என்று முதலீட்டாளர்கள் சந்தேகப்பட்டு, போலீசில் தற்போது புகார் செய்திருக்கின்றனர்.குவாட்ரிகாசிஎஸ்க் எனும் மெய்நிகர் நாணயங்களுக்கான எக்ஸ்சேஞ்ச் நிறுவனர் ஜெரால்டு காட்டன், கடந்த ஆண்டு டிசம்பரில், இந்தியாவுக்கு வந்திருந்தபோது திடீரென இறந்துவிட்டார்.
முதலீட்டாளர்களின் விபரங்கள் அடங்கிய லேப்டாப்பின் பாஸ்வேர்டு உள்ளிட்டவை அவருக்கு மட்டுமே தெரியும் என்பதால், முதலீட்டாளர்களால் பணத்தை திரும்பப் பெற முடியவில்லை.அவரது மனைவி, லேப்டாப் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியவில்லை என கைவிரித்துவிட்டார்.இந்நிலையில், ஜெரால்டு காட்டன், பணத்தை எடுத்துக்கொண்டு இறந்து விட்டதாக நாடகம் நடத்துகிறார் என செய்திகள் பரவின.
ஜெரால்டு காட்டன் மனைவி, தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக தெரிவித்ததுடன், நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தி, பாதுகாப்பு தேடிக்கொண்டு உள்ளார். இதையடுத்து, காட்டனின் உடலை மீண்டும் வெளியே எடுத்து, அது அவரது உடல்தானா என்பதையும், எப்படி இறந்தார் என்பதையும் உறுதி செய்து தருமாறு, முதலீட்டாளர்கள் தரப்பில் போலீசில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|