இம்மாதத்துடன் முடிகிறது ‘சப்கா விஷ்வாஸ்’ திட்டம் இம்மாதத்துடன் முடிகிறது ‘சப்கா விஷ்வாஸ்’ திட்டம் ...  நாட்டின் ஆடைகள் சந்தை 11 சதவீத வளர்ச்சி காணும் நாட்டின் ஆடைகள் சந்தை 11 சதவீத வளர்ச்சி காணும் ...
‘பாஸ்வேர்டு’ தெரியாததால் மீட்க முடியாத பல கோடி டாலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2019
02:46

மான்ட்ரீல் : மெய்நிகர் நாணயத்துக்கான இணையதள சந்தை ஒன்றை நடத்தி வந்தவர் திடீரென இறந்துவிட, ‘பாஸ்வேர்டு’ உள்ளிட்டவை வேறு யாருக்கும் தெரியாத காரணத்தால், முதலீட்டாளர்களின் பல கோடி டாலர் முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில், சந்தையின் நிறுவனர் இறந்து போனதாக நாடகம் நடத்தி, பணத்தை எடுத்துக் கொண்டு விட்டனரோ என்று முதலீட்டாளர்கள் சந்தேகப்பட்டு, போலீசில் தற்போது புகார் செய்திருக்கின்றனர்.குவாட்ரிகாசிஎஸ்க் எனும் மெய்நிகர் நாணயங்களுக்கான எக்ஸ்சேஞ்ச் நிறுவனர் ஜெரால்டு காட்டன், கடந்த ஆண்டு டிசம்பரில், இந்தியாவுக்கு வந்திருந்தபோது திடீரென இறந்துவிட்டார்.

முதலீட்டாளர்களின் விபரங்கள் அடங்கிய லேப்டாப்பின் பாஸ்வேர்டு உள்ளிட்டவை அவருக்கு மட்டுமே தெரியும் என்பதால், முதலீட்டாளர்களால் பணத்தை திரும்பப் பெற முடியவில்லை.அவரது மனைவி, லேப்டாப் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியவில்லை என கைவிரித்துவிட்டார்.இந்நிலையில், ஜெரால்டு காட்டன், பணத்தை எடுத்துக்கொண்டு இறந்து விட்டதாக நாடகம் நடத்துகிறார் என செய்திகள் பரவின.

ஜெரால்டு காட்டன் மனைவி, தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக தெரிவித்ததுடன், நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தி, பாதுகாப்பு தேடிக்கொண்டு உள்ளார். இதையடுத்து, காட்டனின் உடலை மீண்டும் வெளியே எடுத்து, அது அவரது உடல்தானா என்பதையும், எப்படி இறந்தார் என்பதையும் உறுதி செய்து தருமாறு, முதலீட்டாளர்கள் தரப்பில் போலீசில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)