பதிவு செய்த நாள்
20 டிச2019
07:17
புதுடில்லி : யோகா குரு பாபா ராம்தேவின், ‘பதஞ்சலி’ ஆயுர்வேத நிறுவனம், ‘ருச்சி சோயா’ நிறுவனத்தை, 4,350 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.
பதஞ்சலி நிறுவனம், 1,100 கோடி ரூபாயை பங்குகள் மூலமாகவும், 3,250 கோடி ரூபாயை கடன் மூலமாகவும் திரட்டி, ருச்சி சோயாவின் நிலுவைத் தொகையான, 4,350 கோடி ரூபாயை செலுத்தி கையகப்படுத்தி உள்ளது.கடந்த, 2017ம் ஆண்டில், ருச்சி சோயாவின் திவால் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. ஏப்., 2019ல் ருச்சி சோயாவுக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள், பதஞ்சலி நிறுவனத்தின் கையகப்படுத்தும் திட்டத்துக்கு அனுமதி வழங்கின.
கடந்த செப்டம்பரில், தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயமும் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, தற்போது கையகப்படுத்தும் பணி நிறைவுற்றுள்ளது.இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையின் மூலம், ருச்சி சோயாவின் ஆலைகள் மற்றும் சோயாபீன் எண்ணெய் பிராண்டுகளான, ‘மஹாகோஷ், ருச்சி கோல்டு’ ஆகியவை பதஞ்சலிக்கு கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|