பதிவு செய்த நாள்
20 டிச2019
07:18
புதுடில்லி : ஆயுள் காப்பீட்டு துறையில், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதிகள் இன்றி, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என, காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
இதன் மூலம் இத்துறையில், 40 ஆயிரம் முதல், 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவை தெரிவித்துள்ளன.மத்திய அரசு, தனியார் காப்பீட்டு துறையில், அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை, 26 சதவீதத்திலிருந்து, 49 சதவீதமாக உயர்த்தியது.
இதையடுத்து, 2015ம் ஆண்டிலிருந்து இத்துறையில், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடுகள் வந்துள்ளன.இந்நிலையில், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளன.
ஆயுள் காப்பீட்டு துறையில், 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு வருவதன் மூலம், இத்துறையில் சிறந்த தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கும் என, காப்பீட்டு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விமானப் போக்குவரத்து, ஊடகம் மற்றும் காப்பீட்டு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை அதிகரிப்பது குறித்து, விரைவில் அரசு முடிவு செய்யும் என காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|