பதிவு செய்த நாள்
20 டிச2019
07:20
புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று வருமான வரி, இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல், மாநில வணிகங்கள் உள்ளிட்டவை குறித்து, தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை:
மத்திய பட்ஜெட், அடுத்த ஆண்டு, பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்கள் துவங்கி உள்ளன. இதில், பல்வேறு துறையினருடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.இதன் தொடர்ச்சியாக, நேற்றும் தொழில் துறையினரை சந்தித்தார்.
இக்கூட்டத்தில், ‘பார்தி என்டர்பிரைசஸ்’ தலைவர் சுனில் மிட்டல் பார்தி, விக்ரம் கிர்லோஸ்கர், பாலகிருஷ்ண கோயங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இது குறித்து, சுனில் மிட்டல் கூறியதாவது:நான் இன்று ஒரே ஒரு விஷயத்தை பற்றி மட்டுமே அதாவது, நாட்டில் தொழில் செய்வதை எளிதாக்குவது குறித்து மட்டுமே பேச வந்தேன்.
எதிர்பார்ப்பு
தொழில் துறையினர் செயல்படுவதற்கு அதிக சுதந்திரத்தை வழங்குவது குறித்து பேசப்பட்டது. பட்ஜெட்டில், தொழில் முனைவோருடைய ஆற்றலை அதிகரிப்பது குறித்து எதிர்பார்க்கிறோம்.தொழில் செய்வதை எளிதாக்குவது குறித்த கருத்துகளை, நிதியமைச்சர் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டார்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|