பதிவு செய்த நாள்
20 டிச2019
07:22
மும்பை : இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான, ‘சென்செக்ஸ், நிப்டி’ ஆகியவை, தொடர்ந்து மூன்றாவது நாளாக உச்சம் கண்டு சாதனை படைத்துள்ளன.
நேற்றைய வர்த்தகத்தின்போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே இதுவரை இல்லாத உயரமான, 41,719.29 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்தது.
சாதனை:
வர்த்தகத்தின் முடிவில், 115.35 புள்ளிகள் அதிகரித்து, அதாவது, 0.28 சதவீதம் அதிகரித்து, 41,673.92 என்ற சாதனை அளவில் நிலைபெற்றது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், வர்த்தகத்தின் இடையே, 12,268.35 புள்ளிகளை தொட்டது. பின், வர்த்தகத்தின் முடிவில், 38.05 புள்ளிகள் அதாவது, 0.31 சதவீதம் அதிகரித்து, புதிய உச்சமான, 12,259.70 புள்ளிகளில் நிலை பெற்றது.
பங்குச் சந்தைகளின் இந்த எழுச்சிக்கு தகவல் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் வாகன துறைகளில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்தது காரணமாக அமைந்தது.
அதிகரிப்பு:
நேற்றைய பங்கு வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், யெஸ் பேங்க் அதிக லாபமீட்டியது. இந்நிறுவனத்தின் பங்குகள் விலை நேற்று, 6.74 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
யெஸ் பேங்க் நிறுவனத்தை அடுத்து, ‘டி.சி.எஸ்., டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், மகிந்திரா அண்டு மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ ஆகிய நிறுவன பங்குகள் விலை, குறிப்பிடத்தகுந்த அளவில் விலை அதிகரிப்பை சந்தித்தன.இதற்கு மாறாக, ‘வேதாந்தா, எச்.டி.எப்.சி., சன்பார்மா, இண்டஸ்இண்ட் பேங்க்’ ஆகிய நிறுவனப் பங்குகள் விலை, 2.26 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன.
நிகர அடிப்படையில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், புதன் கிழமை அன்று, 1,837 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு களை வாங்கி உள்ளனர். அதே சமயம், உள்நாட்டு முதலீட்டாளர்கள், 1,268 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, அன்றைய தினம் விற்பனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மீண்டது, ‘டாடா’
சைரஸ் மிஸ்திரியை, ‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது தவறு என, தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, நேற்று காலை வரை, டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில் இழைப்பை சந்தித்தன. இருப்பினும், வர்த்தக முடிவில், இக்குழுமத்தைச் சேர்ந்த பெரும்பாலான நிறுவன பங்குகளின் விலை, 3 சதவீதம் வரை அதிகரித்தது.குறிப்பாக, டி.சி.எஸ்., 2.83 சதவீதமும், டாடா மோட்டார்ஸ், 2.55 சதவீதமும் விலை உயர்ந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|