பதிவு செய்த நாள்
21 டிச2019
03:51
மும்பை, : ஆனந்த் மகிந்திரா, அடுத்த ஆண்டு ஏப்ரல், 1ம் தேதி முதல், மகிந்திரா குழும நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார்.
மகிந்திரா குழுமத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:ஆனந்த் மகிந்திரா, அடுத்த ஆண்டு ஏப்., 1 முதல், மகிந்திரா குழுமத்தின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார். இதையடுத்து அவர், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் நிர்வாக குழுவில், செயல் சாரா தலைவராக இருப்பார். இந்த முடிவு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட ஒன்றாகும்.ஏப்., 1ம் தேதி முதல், பவன் கோயங்கா, நிர்வாக இயக்குனராகவும், தலைமை நிர்வாகியாகவும் பொறுப்பேற்பார்.
ஆனந்த் மகிந்திரா, செயல்சாரா தலைவராக இருந்து, நிர்வாக இயக்குனருக்கு வழிகாட்டியாக செயல்படுவார். குறிப்பாக, திட்டமிடல், இடர் குறைப்பு ஆகிய பகுதிகளில் வழிகாட்டுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|