பதிவு செய்த நாள்
21 டிச2019
03:51
சென்னை : ஹூண்டாய் நிறுவனத்தின், புதிய, ‘ஆரா’ கார், சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், தன் புதிய படைப்பான ஆரா காரை, பார்வைக்காக, சென்னையில் அறிமுகம் செய்தது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், எஸ்.எஸ்.கிம், புதிய காரை அறிமுகம் செய்து வைத்தார்.அதிகாரப்பூர்வ அறிமுகம், ஜனவரியில் நடைபெற உள்ளது. அப்போது. காரின் விலை அறிவிக்கப்படும். மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு போட்டியாக ஆரா இருக்கும்.விழாவில், கிம் கூறியதாவது:புதிய ஆரா கார், இந்திய வாடிக்கையாளர்களுக்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தயாரிக்கப்படும் ஆரா, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.வாகன துறையில், 13 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ள நிலையில், எங்கள் நிறுவனத்தின் வீழ்ச்சி, 7 சதவீதமாக உள்ளது. ஆனால், ஹூண்டாய் கார்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதால், லாபத்தில் பாதிப்பு இல்லை. மேலும், 2020, இரண்டாம் காலாண்டில், இத்துறை, வளர்ச்சிப் பாதைக்கு செல்லும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|