பதிவு செய்த நாள்
21 டிச2019
03:56
புதுடில்லி : இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், 5.22 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, ‘ஸ்பெக்ட்ரம்’ ஏலத் திட்டத்தை பரிந்துரை செய்திருந்தது.
இதற்கு, டி.சி.சி., எனும், டிஜிட்டல் தகவல் தொடர்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏலம் நடத்தப்படும் என தெரிகிறது.இது குறித்து, தொலை தொடர்பு துறை செயலர் அன்ஷு பிரகாஷ் கூறியதாவது:டிராய் அமைப்பு கொடுத்த பரிந்துரையை, தகவல் தொடர்பு ஆணையமான, டி.சி.சி., ஏற்று, அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏலம் நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கிறோம்.
இந்த ஏலத்தில், 22 தொலை தொடர்பு வட்டங்களில், 8,300 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்படும். முன்பணம் செலுத்தப்பட்ட பின், இரண்டு ஆண்டுகள் கழித்து, 16 ஆண்டுகள் தவணையில் மீதித் தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|