பதிவு செய்த நாள்
21 டிச2019
03:58
மும்பை : தொடர்ந்து நான்காவது நாளாக, நேற்றும், இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து, புதிய சாதனையை படைத்துள்ளன.
இருப்பினும், கடந்த மூன்று நாட்களுடன் ஒப்பிடும்போது, நேற்று சிறிய அளவிலேயே சந்தை உயர்ந்தது.இந்த உயர்வுக்கு வங்கிகள், நிதி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகளின் விலை அதிகரித்தது காரணமாக அமைந்தது.இருப்பினும், தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நடப்பு நிதியாண்டுக்கான, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, 4.6 சதவீதமாக குறைத்து அறிவித்தது.
இதன் காரணமாக, வர்த்தகம் இறுதியில், சந்தை அதுவரை சந்தித்த லாபத்தை இழந்து, சிறிது உயர்வுடன் நிறைவு பெற்றது.சென்செக்ஸ், 41,681.54 புள்ளிகளையும், நிப்டி, 12,271.80 புள்ளிகளையும் அடைந்து, நான்காவது நாளாகவும் சாதனை படைத்தன.இதையடுத்து, இந்த வாரத்தில், சென்செக்ஸ், 671.83 புள்ளிகளும், நிப்டி, 185.10 புள்ளிகளும் அதிகரித்தன.நேற்றைய சந்தையில், ‘டாடா ஸ்டீல்’ அதிக லாபமும், ‘வேதாந்தா’ அதிக இழப்பையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|