பதிவு செய்த நாள்
22 டிச2019
03:50
புதுடில்லி : புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, யு.டி.ஐ., ஏ.எம்.சி., நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் விண்ணப்பம் செய்துள்ளது.
மியூச்சுவல் பண்டு துறையைச் சேர்ந்த, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான, ‘யு.டி.ஐ., அசெட் மேனேஜ்மென்ட்’ நிறுவனம், பங்குச் சந்தையில் புதிய பங்குகளை வெளியிட திட்டமிட்டுஉள்ளது.‘ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட், எச்.டி.எப்.சி., அசெட் மேனேஜ்மென்ட்’ ஆகிய நிறுவனங்கள் வரிசையில், மூன்றாவது புதிய பங்குகளை வெளியிட களம் இறங்கும் நிறுவனம், யு.டி.ஐ., ஏ.எம்.சி.,யாகும்.
இந்த புதிய பங்கு வெளியீட்டில், முழுக்க நிறுவனத்தின் பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே வெளியிடப்பட உள்ளன.எஸ்.பி.இ., – எல்.ஐ.சி., பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகிய நான்கு அரசு துறை நிறுவனங்களும், தலா, 12.25 சதவீத பங்குகளை வைத்துள்ளன. மீதம் உள்ள பங்குகள், அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டி ரோவ் பிரைஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் வசம் உள்ளது. இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம், யு.டி.ஐ., ஏ.எம்.சி., 3,800 லிருந்து, 4,800 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|