டெபிட் கார்டுகள்’ எண்ணிக்கை வீழ்ச்சிடெபிட் கார்டுகள்’ எண்ணிக்கை வீழ்ச்சி ... 18 விமான சேவையை நிறுத்தியது ‛கோ ஏர்’ 18 விமான சேவையை நிறுத்தியது ‛கோ ஏர்’ ...
மூன்றாம் நபர் இழப்பீடுக்கு உச்சவரம்பு பொது காப்பீடு நிறுவனங்கள் யோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2019
04:20

புதுடில்லி: ‘மோட்டார் வாகன விபத்துகளில், பொதுக் காப்பீடு நிறுவனங்கள் வழங்கும், மூன்றாம் நபர் இழப்பீட்டுத் தொகையை, அதிகபட்சம், 10 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

‘கூடுதல் இழப்பீட்டுத் தொகை, சாலை போக்குவரத்து நிதியம் ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் வழங்கப்பட வேண்டும்’ என, பொதுக் காப்பீடு கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.மோட்டார் வாகனச் சட்டம், 2019படி, மோட்டார் வாகன விபத்துகளில் வழங்கப்படும் மூன்றாம் நபருக்கான இழப்பீடு தொகை மற்றும் அடிப்படை பிரீமியம் தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.இதற்காக, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்துடன் பேசி முடிவெடுக்க, அந்த சட்டம் வலியுறுத்துகிறது.

தற்போது, வாகன விபத்துகளுக்கான மூன்றாம் நபர் இழப்பீடு தொகைக்கு, உச்ச வரம்பு கிடையாது. தீர்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்கள் நிர்ணயிக்கும் தொகை, மூன்றாம் நபருக்கு இழப்பீடாக வழங்கப்படுகிறது. இது, காப்பீட்டு நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக விளங்குகிறது.இதற்கு பதில், மூன்றாம் நபர் விபத்து காப்பீடு இழப்பீடு தொகையை, 10 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்து, அதை மட்டும், பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

மீதி தொகையை, சாலை போக்குவரத்து நிதியத்திலிருந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, பொதுக் காப்பீடு கவுன்சிலால் முன்வைக்கப்பட்டுஉள்ளது. பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி விதித்து, அதன் மூலம், புதிய நிதியம் துவக்கி, மூன்றாம் நபர் இழப்பீடுகளை அதிலிருந்து வழங்க வேண்டும் என்ற ஆலோசனையை, மத்திய சாலை போக்குவரத்து துறை ஆராய்ந்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)