பதிவு செய்த நாள்
26 டிச2019
03:02
புதுடில்லி: கடந்த நிதியாண்டில், வங்கிகளில் மொத்தம், 71 ஆயிரத்து 543 கோடி ரூபாய் அளவுக்கு, மோசடிகள் நடைபெற்றுள்ளனஎன, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த நிதியாண்டில்,வங்கிகளில் மொத்தம்,71 ஆயிரத்து 543 கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகள் நடைபெற்று உள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 74 சதவீதம் அதிகமாகும்.இதற்கு முந்தைய நிதியாண்டில், 41 ஆயிரத்து 167 கோடி ரூபாய் அளவுக்குமோசடிகள் நடைபெற்று இருந்தன.
மேலும், கடந்த நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.கடந்த நிதியாண்டில் மொத்தம், 6,081 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், 5.916 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.கடந்த நிதியாண்டில், மோசடி செய்யப்பட்ட மொத்த தொகையில், 90.2 சதவீதம் பொதுத் துறை வங்கிகளுடையதாகும். வழக்குகளைப் பொறுத்தவரை, 55.4 சதவீதம் பொதுத்துறை வங்கிகளுடையதாகும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி, ‘2018- – 19ல் வங்கிகளின் போக்கு மற்றும் முன்னேற்றம்’ எனும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|