இரு அடுக்கு ஜி.எஸ்.டி., போதும் நிடி ஆயோக் உறுப்பினர் கருத்து இரு அடுக்கு ஜி.எஸ்.டி., போதும் நிடி ஆயோக் உறுப்பினர் கருத்து ...  மியூச்சுவல் பண்டில் முதலீடு மியூச்சுவல் பண்டில் முதலீடு ...
ஜான்சன் அண்டு ஜான்சனுக்கு அபராதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2019
03:05

புதுடில்லி: தேசிய மிகை லாப தடுப்பு ஆணையமான, என்.ஏ.ஏ., ஜான்சன் அண்டு ஜான்சனுக்கு, 230 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஜி.எஸ்.டி., குறைப்பின் பலனை, நுகர்வோருக்கு வழங்காத காரணத்தினால், இந்த அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக, என்.ஏ.ஏ., தெரிவித்துள்ளது.ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்கும்பட்சத்தில், அதன் பலனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்ற நிலையில், ஜான்சன் அண்டு ஜான்சன் அவ்வாறு செய்யவில்லை.இதன் காரணமாக இந்நிறுவனத்துக்கு, 230 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்நிறுவனம் இந்த அபராத தொகையை, மூன்று மாதங்களுக்குள் டெபாசிட் செய்தாக வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து ஆணையம் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இந்நிறுவனம் தயாரிக்கும் பொருட்களுக்கு, கடந்த, 2017 நவம்பர், 15ல், ஜி.எஸ்.டி., 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாககுறைக்கப்பட்டது. ஆனால், அதன் பலனை இந்நிறுவனம் நுகர்வோருக்கு வழங்கவில்லை.

மேலும், வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்க, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் பின்பற்றியுள்ள வழிமுறை நியாயமற்றது, தன்னிச்சையானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம், ‘விலையை குறைப்பதின் மூலம் வரி குறைப்பின் பயனை கணக்கிட எந்த வழிகாட்டுதல்களும் இல்லாத நிலையில், நிறுவனம் பல்வேறு முறைகளின் மூலம், சட்டரீதியான தன் கடமைகளை சரியாக நிறைவேற்றி இருக்கிறது’ என,தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)