பதிவு செய்த நாள்
26 டிச2019
03:05
புதுடில்லி: தேசிய மிகை லாப தடுப்பு ஆணையமான, என்.ஏ.ஏ., ஜான்சன் அண்டு ஜான்சனுக்கு, 230 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஜி.எஸ்.டி., குறைப்பின் பலனை, நுகர்வோருக்கு வழங்காத காரணத்தினால், இந்த அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக, என்.ஏ.ஏ., தெரிவித்துள்ளது.ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்கும்பட்சத்தில், அதன் பலனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்ற நிலையில், ஜான்சன் அண்டு ஜான்சன் அவ்வாறு செய்யவில்லை.இதன் காரணமாக இந்நிறுவனத்துக்கு, 230 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்நிறுவனம் இந்த அபராத தொகையை, மூன்று மாதங்களுக்குள் டெபாசிட் செய்தாக வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து ஆணையம் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இந்நிறுவனம் தயாரிக்கும் பொருட்களுக்கு, கடந்த, 2017 நவம்பர், 15ல், ஜி.எஸ்.டி., 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாககுறைக்கப்பட்டது. ஆனால், அதன் பலனை இந்நிறுவனம் நுகர்வோருக்கு வழங்கவில்லை.
மேலும், வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்க, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் பின்பற்றியுள்ள வழிமுறை நியாயமற்றது, தன்னிச்சையானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம், ‘விலையை குறைப்பதின் மூலம் வரி குறைப்பின் பயனை கணக்கிட எந்த வழிகாட்டுதல்களும் இல்லாத நிலையில், நிறுவனம் பல்வேறு முறைகளின் மூலம், சட்டரீதியான தன் கடமைகளை சரியாக நிறைவேற்றி இருக்கிறது’ என,தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|