பதிவு செய்த நாள்
26 டிச2019
03:08
புதுடில்லி; மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், நடப்பு ஆண்டில் மட்டும், 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த போக்கு அடுத்த ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, நடப்பு ஆண்டில், 18 சதவீதம் அளவுக்கு, அதாவது, 4.2 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவுக்கு, 27 லட்சம் கோடி ரூபாயாக நவம்பர் மாத இறுதியில் உயர்ந்தது. கடந்த ஆண்டு, டிசம்பர் மாத இறுதியில் இது, 22.86 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.நடப்பு ஆண்டு ஏற்றத்துக்கு, கடன் திட்டங்களில் அதிகரித்த முதலீடு மற்றும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக அமைந்தன.
முதலீடுகளைப் பொறுத்தவரை, நடப்பு ஆண்டில் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்த காரணத்தால் பங்குகள் சார்ந்த திட்டங்களில் அதிக முதலீடுகள் வரவில்லை. ஆனால், அதற்கு மாற்றாக, கடன் திட்டங்களில் அதிக அளவிலான முதலீடுகள் குவிந்தன.அடுத்த ஆண்டில், மியூச்சுவல பண்டு துறை, 17 முதல், 18 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என துறையினரால் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|