பதிவு செய்த நாள்
26 டிச2019
03:10
புதுடில்லி: ஊபர் நிறுவனத்தின் இணை நிறுவனரான டிராவிஸ் கலானிக், நிர்வாக குழுவிலிருந்து விலகுவதுடன், தன் வசமுள்ள நிறுவன பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதியில், நிர்வாக குழுவிலிருந்து டிராவிஸ் கலானிக் விலகிவிடுவார் என, ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஊபர் நிறுவனத்தை, கலானிக் தன் தனித்துவம் வாய்ந்த செயல்திறத்தால் உலகின் மிகப்பெரிய டாக்ஸி சேவை நிறுவனமாக கட்டமைத்தார். இது டாக்ஸி உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது.
ஆனால், அவரது தலைமை குறித்தான அவதூறுகள், மற்றும் புகார்கள் காரணமாக, பங்குதாரர்கள் அழுத்தம் கொடுக்க, கலானிக் தன் பதவியை ராஜினாமா செய்தார்.காலானிக், 2017 ஜூன் மாதம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகினார்.
அதன் தொடர்ச்சியாக இப்போது, நிர்வாக குழுவிலிருந்தும் வெளியேறுகிறார்.கலானிக் தன் வசம் உள்ள, 21 ஆயிரத்து, 300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளில் பெரும்பகுதியை கடந்த மாதமே விற்றுவிட்டதாகவும் தெரிகிறது. கலானிக் இது குறித்த தன் அறிக்கையில், ‘ஊபர் இப்போது பொது நிறுவனமாகிவிட்டது. தற்போதைய என்னுடைய வணிகத்தில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
கலானிக் புதிதாக, கோஸ்ட் கிச்சன் எனும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவங்கி இருக்கிறார். ஊபர் பங்குகள் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை, இந்த புதிய வணிகத்தில் முதலீடு செய்வார் என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|