மியூச்சுவல் பண்டில் முதலீடு மியூச்சுவல் பண்டில் முதலீடு ...  கன்டெய்னர் மூலமான வர்த்தகம் செப்டம்பர் காலாண்டில் மந்தம் கன்டெய்னர் மூலமான வர்த்தகம் செப்டம்பர் காலாண்டில் மந்தம் ...
ஊபரை விட்டு வெளியேறுகிறார் இணை நிறுவனர் கலானிக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2019
03:10

புதுடில்லி: ஊபர் நிறுவனத்தின் இணை நிறுவனரான டிராவிஸ் கலானிக், நிர்வாக குழுவிலிருந்து விலகுவதுடன், தன் வசமுள்ள நிறுவன பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில், நிர்வாக குழுவிலிருந்து டிராவிஸ் கலானிக் விலகிவிடுவார் என, ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஊபர் நிறுவனத்தை, கலானிக் தன் தனித்துவம் வாய்ந்த செயல்திறத்தால் உலகின் மிகப்பெரிய டாக்ஸி சேவை நிறுவனமாக கட்டமைத்தார். இது டாக்ஸி உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது.

ஆனால், அவரது தலைமை குறித்தான அவதூறுகள், மற்றும் புகார்கள் காரணமாக, பங்குதாரர்கள் அழுத்தம் கொடுக்க, கலானிக் தன் பதவியை ராஜினாமா செய்தார்.காலானிக், 2017 ஜூன் மாதம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகினார்.

அதன் தொடர்ச்சியாக இப்போது, நிர்வாக குழுவிலிருந்தும் வெளியேறுகிறார்.கலானிக் தன் வசம் உள்ள, 21 ஆயிரத்து, 300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளில் பெரும்பகுதியை கடந்த மாதமே விற்றுவிட்டதாகவும் தெரிகிறது. கலானிக் இது குறித்த தன் அறிக்கையில், ‘ஊபர் இப்போது பொது நிறுவனமாகிவிட்டது. தற்போதைய என்னுடைய வணிகத்தில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.

கலானிக் புதிதாக, கோஸ்ட் கிச்சன் எனும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவங்கி இருக்கிறார். ஊபர் பங்குகள் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை, இந்த புதிய வணிகத்தில் முதலீடு செய்வார் என கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)