பதிவு செய்த நாள்
27 டிச2019
03:14
புதுடில்லி: உலகளாவிய வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் கன்டெய்னர் மூலமான வர்த்தகம், மந்தநிலையில் இருப்பதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
கடல்சார் நிறுவனமான, ‘மெர்க்ஸ்’ குழுமத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் கன்டெய்னர் மூலமான வர்த்தகம், பெரிய வளர்ச்சி எதையும் எட்டாமல், பழைய நிலையில் நீடிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், உள்நாட்டு தேவைகள் குறைந்தது.செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் கன்டெய்னர் மூலமான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, உலக வளர்ச்சியான, 1.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, பெரிய வளர்ச்சி அல்லது வீழ்ச்சி எதுவுமின்றி உள்ளது. இருப்பினும், நாட்டின் ஆப்ரிக்காவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி, 11 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை சாதனங்கள், வாகனங்கள், விதைகள், தானியங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்ததாகும்.
பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பணப் புழக்கத்தில் இறுக்கம், வெளிநாட்டு ஏற்றுமதி, ‘ஆர்டர்’கள் குறைந்தது, உள்நாட்டு அரசியல் சூழ்நிலை, டாலருக்கு எதிரான ரூபாயின் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை முதலீட்டை பாதித்துள்ளன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|