பதிவு செய்த நாள்
28 டிச2019
02:43
புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பொதுத் துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
வங்கிகளின் நிதி நடவடிக்கை மற்றும் வணிக வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக, இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாக தெரிகிறது.தேவையை உருவாக்குவதிலும், நுகர்வை அதிகரிப்பதிலும் வங்கி துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பொதுத் துறை வங்கிகளின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிப்ரவரி, 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது:வங்கிகளின் வாராக் கடன்களை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மூலமும், பிற வழிகளிலும் மீட்பது குறித்தும், இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.கடந்த நான்கு நிதியாண்டுகளில், 4.01 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வாராக் கடன்கள் மீட்கப்பட்டு உள்ளன. நடப்பு நிதியாண்டில் சாதனை அளவாக, 1.57 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.நிதியமைச்சருடனான சந்திப்பின்போது, வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்குமாறும், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கையின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்படவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|