அடுத்த ஆண்டின் பிற்பாதியில் வாகன விற்பனை அதிகரிக்கும் அடுத்த ஆண்டின் பிற்பாதியில் வாகன விற்பனை அதிகரிக்கும் ...  நடப்பாண்டில் அதிகரித்த சில்லரை விலை பணவீக்கம் நடப்பாண்டில் அதிகரித்த சில்லரை விலை பணவீக்கம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சர் இன்று சந்திப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2019
02:43

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பொதுத் துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.

வங்கிகளின் நிதி நடவடிக்கை மற்றும் வணிக வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக, இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாக தெரிகிறது.தேவையை உருவாக்குவதிலும், நுகர்வை அதிகரிப்பதிலும் வங்கி துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பொதுத் துறை வங்கிகளின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிப்ரவரி, 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, உயரதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது:வங்கிகளின் வாராக் கடன்களை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மூலமும், பிற வழிகளிலும் மீட்பது குறித்தும், இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.கடந்த நான்கு நிதியாண்டுகளில், 4.01 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வாராக் கடன்கள் மீட்கப்பட்டு உள்ளன. நடப்பு நிதியாண்டில் சாதனை அளவாக, 1.57 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.நிதியமைச்சருடனான சந்திப்பின்போது, வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்குமாறும், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கையின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்படவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)