பதிவு செய்த நாள்
28 டிச2019
02:44
புதுடில்லி: மத்திய அரசிடமிருந்து, நடப்பு நிதியாண்டில் புதிதாக, 4,360 கோடி ரூபாய் பங்கு மூலதனம் கிடைக்க இருப்பதாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மத்திய நிதியமைச்சகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு பங்கு மூலதனமாக, 3,800 கோடி ரூபாய் வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது. இப்போது மேலும், 560 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கான கடிதம், கடந்த, 25ம் தேதியன்று வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், யூகோ வங்கிக்கும், 2,142 கோடி ரூபாய் பங்கு மூலதனம் வழங்க, அரசு அனுமதி வழங்கி உள்ளது.
வங்கிகளின் மூலதன இருப்பு விகிதம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள வரம்பை விட குறையும் நிலையில், வங்கிகள் விதிமீறல் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் சூழல் ஏற்படும். இதை தவிர்க்க, அரசு புதிதாக பங்கு மூலதனம் கொடுத்து, வங்கிகளுக்கு உதவுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|