அடுத்த ஆண்டின் பிற்பாதியில் வாகன விற்பனை அதிகரிக்கும் அடுத்த ஆண்டின் பிற்பாதியில் வாகன விற்பனை அதிகரிக்கும் ...  நாடு சரியான பாதையில் செல்கிறது: ஆய்வறிக்கை நாடு சரியான பாதையில் செல்கிறது: ஆய்வறிக்கை ...
நடப்பாண்டில் அதிகரித்த சில்லரை விலை பணவீக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2019
02:46

புதுடில்லி: நடப்பு ஆண்டில் அதிகரித்து வந்த காய்கறிகளின் விலையால், நாட்டின் சில்லரை விலை பணவீக்கமும் அதிகரித்தது.

சில்லரை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை, இந்த ஆண்டின் பெரும்பகுதி, ரிசர்வ் வங்கியின் சவுகரியமான நிலையாக நிர்ணயிக்கப்பட்ட, 4 சதவீதத்துக்குள்ளாகவே இருந்து வந்தது.தாமதம்இருப்பினும், நவம்பர் மாதத்தில், மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், 5.54 சதவீதமாக சில்லரை விலை பணவீக்கம் எகிறியது.சமையல் அறை பொருட்களில் முக்கியமானதாக கருதப்படும் தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலை அதிகரிக்காமல் இருப்பதற்காக, கடந்த ஆண்டு நவம்பரில், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், இவற்றின் விலை ஆண்டு இறுதியில் அதிகரித்துவிட்டது.

பணவீக்கத்தை பொறுத்தவரை நடப்பு ஆண்டின் பெரும்பகுதி, அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், ஆண்டின் இறுதியில் நிலைமை தலைகீழானது. வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் முயற்சியில், அரசு தாமதமாகவே இறங்கியது.அதிகரிப்புடிசம்பரில் கூடிய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், சில்லரை விலை பணவீக்கம், 5.1 முதல், 4.7 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்ப்பதாக தெரிவித்தது.இதற்கு வெங்காயம், பழங்கள், பால், பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக அமைந்ததாக தெரிவித்தது.மேலும், இதற்கு முன், இரண்டாவது அரையாண்டில், சில்லரை விலை பணவீக்கம், 3.5 முதல், 3.7 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.மேலும், அடுத்த நிதியாண்டின் முதல் அரையாண்டில், சில்லரை விலை பணவீக்கம், 4 முதல், 3.8 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில், பணவீக்கம், 2.3 முதல், 3.0 சதவீதம் வரை இருந்த நிலையில், அதன்பின் அதிகரிக்கத் துவங்கியது.

வட்டி
இந்நிலையில், தர நிர்ணய நிறுவனமான இக்ரா, டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம், 5.8 முதல், 6.0 சதவீதமாக அதிகரித்திருக்கும் என தெரிவித்துள்ளது.மொத்த விலை பணவீக்கத்தை பொறுத்தவரை, இதற்கு நேர்மாறாக உள்ளது. ஜனவரி மாதத்தில், 3.58 சதவீதமாக இருந்தது, அக்டோபரில், 0.16 சதவீதமாக சரிந்தது.இதற்கு முக்கிய காரணம், எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலை குறைந்திருந்தது தான்.இந்நிலையில் ரிசர்வ் வங்கி, அடுத்து ஒரு வட்டி குறைப்புக்கு செல்லக்கூடும் என, பல பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)