பதிவு செய்த நாள்
28 டிச2019
02:48
மும்பை: நடப்பு நிதியாண்டில், கடன் வளர்ச்சி, 58 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக இருக்கும் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.
தர நிர்ணய நிறுவனமான இக்ரா, அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 4.5 சதவீதமாக குறைந்தது. இது ஆறு ஆண்டுகளில் இல்லாததாகும்.இந்நிலையில், கடன் வளர்ச்சி 6.5 முதல் 7 சதவீதமாக சரிந்திருக்கும். இந்த மதிப்பீடு உண்மையாக மாறினால், இது, 58 ஆண்டுகளில் மிகக் குறைந்த கடன் வளர்ச்சியாக இருக்கும்.ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, 1962ம் நிதியாண்டில், கடன் வளர்ச்சி, 5.4 சதவீதமாக இருந்தது.ரிசர்வ் வங்கி உள்பட பல அமைப்புகள், இந்த நிதியாண்டின் வளர்ச்சி குறித்த தங்கள் கணிப்பை குறைத்து அறிவித்து வருகின்றன. பொருளாதாரம் முன்னோக்கி செல்லும் என யாரும் தெரிவிக்கவில்லை.
பொருளாதார வளர்ச்சியில் முடக்க நிலை, குறைந்துவிட்ட மூலதன தேவைகள், கடன் கொடுக்கும் நிறுவனங்களிடம் ரிஸ்க் எடுக்க பயப்படும் போக்கு ஆகிய காரணங்களால், நடப்பு நிதியாண்டில் கடன் வளர்ச்சி குறைவதற்கே வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|