பதிவு செய்த நாள்
29 டிச2019
05:55
மும்பை: நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது. கடந்த, 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 45.60 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்து, 45 ஆயிரத்து, 499 கோடி டாலராக புதிய உயரத்தை தொட்டுள்ளது.
இது, இந்திய மதிப்பில், 32.30 லட்சம் கோடி ரூபாய்.இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 45 ஆயிரத்து, 499 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இது ஒரு புதிய சாதனையாகும்.இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 107 கோடி டாலர் அதிகரித்து, 45 ஆயிரத்து, 449 கோடி டாலராக உயர்ந்திருந்தது.மதிப்பீட்டு வாரத்தில், இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், மொத்த இருப்பில் முக்கிய பங்கு வகிக்கும், வெளிநாட்டு பணத்தின் மதிப்பு, 31.1 கோடி டாலர் அதிகரித்து, 42 ஆயிரத்து, 273 கோடி டாலராக உயர்ந்தது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|