பதிவு செய்த நாள்
29 டிச2019
05:59
புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி உயர் அதிகாரிகளை நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, நிலுவையில் உள்ள வங்கி அதிகாரிகள் மீதான முறைகேடுகள் சம்பந்தமான வழக்குகளை, பொதுத்துறை வங்கிகள் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் விசாரணை அமைப்புகள் குறித்து எந்த பயமும் தேவையில்லை என்றும் அறிவுறுத்தி உள்ளார்.மேலும், எம்.டி.ஆர்., எனும் வணிக தள்ளுபடி கட்டணங்கள், ஜனவரி 1ம் தேதி முதல், குறிப்பிட்ட சிலவகையான பணம் செலுத்தும் முறைகளில் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து ரூபே மற்றும் யு.பி.ஐ., தளம் வழியாக செலுத்தப்படும் பணத்துக்கு கட்டணம் ஜனவரி 1ம் தேதி முதல் இருக்காது. ஜூலை மாதம் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது, நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில், எம்.டி.ஆர்., கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.எம்.டி.ஆர்., கட்டணம் என்பது, ஒரு வணிக நிறுவனம், நுகர்வோரிடம் இருந்து, டிஜிட்டல் முறையில் பணம் பெறும்போது, அதற்காக வங்கிக்கு, வணிக நிறுவனம் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கட்டணமாக கொடுக்க வேண்டும்.டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சிக்கு இது தடையாக இருக்கும் என்பதால், கட்டணத்தை நீக்க அரசு முடிவு செய்துஉள்ளது.
இக்கூட்டத்தில், வங்கி அதிகாரிகளிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசு அனைத்தையும் செய்துவருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.சி.பி.ஐ., உள்ளிட்ட ஏஜென்சிகளுக்கு பயந்து, கடன் வழங்குவதை நிறுத்த வேண்டாம். கடன் வழங்குவது குறித்து, வங்கி அதிகாரிகள் அவர்கள் முடிவுபடி செயல்படலாம்.வங்கி அதிகாரிகள் அனுமதித்தால் அன்றி, எந்த வழக்கும் மத்திய புலனாய்வு துறைக்கு அனுப்பப்படுவதில்லை.வங்கி, ஒரு வழக்கை, சி.பி.ஐ.,க்கு அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்து, அதன் உள் கமிட்டியின் ஆலோசனை படி நடந்துகொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|