அன்னிய செலாவணி தொடர்ந்து ஏறுமுகம் அன்னிய செலாவணி தொடர்ந்து ஏறுமுகம் ...  பார்வையில்லாதவர்கள் ரூபாயை அடையாளம் காண புதிய செயலி பார்வையில்லாதவர்கள் ரூபாயை அடையாளம் காண புதிய செயலி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி அதிகாரிகள் பயப்பட வேண்டாம்: நிதியமைச்சர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2019
05:59

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி உயர் அதிகாரிகளை நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, நிலுவையில் உள்ள வங்கி அதிகாரிகள் மீதான முறைகேடுகள் சம்பந்தமான வழக்குகளை, பொதுத்துறை வங்கிகள் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் விசாரணை அமைப்புகள் குறித்து எந்த பயமும் தேவையில்லை என்றும் அறிவுறுத்தி உள்ளார்.மேலும், எம்.டி.ஆர்., எனும் வணிக தள்ளுபடி கட்டணங்கள், ஜனவரி 1ம் தேதி முதல், குறிப்பிட்ட சிலவகையான பணம் செலுத்தும் முறைகளில் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து ரூபே மற்றும் யு.பி.ஐ., தளம் வழியாக செலுத்தப்படும் பணத்துக்கு கட்டணம் ஜனவரி 1ம் தேதி முதல் இருக்காது. ஜூலை மாதம் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது, நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில், எம்.டி.ஆர்., கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.எம்.டி.ஆர்., கட்டணம் என்பது, ஒரு வணிக நிறுவனம், நுகர்வோரிடம் இருந்து, டிஜிட்டல் முறையில் பணம் பெறும்போது, அதற்காக வங்கிக்கு, வணிக நிறுவனம் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கட்டணமாக கொடுக்க வேண்டும்.டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சிக்கு இது தடையாக இருக்கும் என்பதால், கட்டணத்தை நீக்க அரசு முடிவு செய்துஉள்ளது.

இக்கூட்டத்தில், வங்கி அதிகாரிகளிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசு அனைத்தையும் செய்துவருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.சி.பி.ஐ., உள்ளிட்ட ஏஜென்சிகளுக்கு பயந்து, கடன் வழங்குவதை நிறுத்த வேண்டாம். கடன் வழங்குவது குறித்து, வங்கி அதிகாரிகள் அவர்கள் முடிவுபடி செயல்படலாம்.வங்கி அதிகாரிகள் அனுமதித்தால் அன்றி, எந்த வழக்கும் மத்திய புலனாய்வு துறைக்கு அனுப்பப்படுவதில்லை.வங்கி, ஒரு வழக்கை, சி.பி.ஐ.,க்கு அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்து, அதன் உள் கமிட்டியின் ஆலோசனை படி நடந்துகொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)