சந்தையின் புத்தாண்டு எதிர்பார்ப்புகள்! சந்தையின் புத்தாண்டு எதிர்பார்ப்புகள்! ...  புத்தாண்டு பரிசு எஸ்.பி.ஐ., வட்டி குறைப்பு புத்தாண்டு பரிசு எஸ்.பி.ஐ., வட்டி குறைப்பு ...
அடுத்த நிதியாண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் ; உலகளவிலும் நிலைமைகள் சீராக வாய்ப்பு உள்ளது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2019
04:49

புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 23.43 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 24.14 லட்சம் கோடி ரூபாய் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிச்சயமற்ற உலகளாவிய நிலைமை, அதிகரித்து வரும் பாதுகாப்பு வாதம் ஆகியவற்றுக்கு மத்தியில், நாட்டின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 330 –- 340 பில்லியன் டாலர் அதாவது, 23.43 –- 24.14 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை தொடும் என, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பான, எப்.ஐ.இ.ஓ., தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், நவம்பர் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2 சதவீதம் அளவுக்கு குறைந்து, 212 பில்லியன் டாலராக உள்ளது.

அதாவது, இந்திய மதிப்பில், 15.05 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.சரிவுஇது குறித்து, எப்.ஐ.இ.ஓ.,வின் தலைவர் சரத் குமார் சராப் மேலும் தெரிவித்துள்ளதாவது:உலகளாவிய நிலைமை மிகவும் சவாலானதாக மாறி உள்ளது. அதிகரித்து வரும் பாதுகாப்பு வாதம், நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி வருகிறது. இந்த போக்குகள், ஏற்றுமதிகள் மீது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.உலகளாவிய வர்த்தகத்தில், இந்தியா குறைந்த பங்கை கொண்டிருந்தாலும், உலக நாடுகளின் இறக்குமதியின் போக்கையே, இந்தியாவின் ஏற்றுமதி பின்பற்றி வருகிறது.

எனவே, உலகளவில் இறக்குமதி சரியும்போது, நம் நாட்டின் ஏற்றுமதியும் பாதிப்புக்கு உள்ளாகிறது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் இறக்குமதி, 1.99 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டிருக்கிறது.இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி, 23.43 லட்சம் கோடி ரூபாய் முதல், 24.14 லட்சம் கோடி ரூபாய் வரையிலான நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நிலவரங்கள், அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சீராகி, முன்னேற்றம் காணும் பட்சத்தில், நம் ஏற்றுமதி, அடுத்த நிதியாண்டில், 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.பேோட்டிஇருப்பினும், உலகப் பொருளாதாரத்தின் மாறும் இறக்குமதி முறைகளுடன், நம் ஏற்றுமதி இணைந்திருக்க வேண்டியது அவசியம்.

உலகளாவிய இறக்குமதியில், மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், வாகனங்கள், இயந்திரங்கள், பெட்ரோலியப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை, 50 சதவீத பங்கை பெற்றுள்ளன.துரதிருஷ்டவசமாக நம் ஏற்றுமதியில் இத்தகைய பொருட்களின் பங்கு, 33 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.இந்த, 33 சதவீதத்தில், பாதி பங்கு வகிப்பது பெட்ரோலியப் பொருட்கள் தான் எனினும், இத்தகைய பொருட்களில், உலகளவில் நம் பங்கு, 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
இவை, ஒருபுறமிருக்க, உள்கட்டமைப்பு, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றின் வளர்ச்சிக்கான முயற்சிகள், ஏற்றுமதியில் உள்ள போட்டிகளை சமாளிக்க உதவும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)