பதிவு செய்த நாள்
02 ஜன2020
23:49
மும்பை:பார்வை குறைபாடு உடையவர்கள், ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளுவதற்கு வசதியாக, ரிசர்வ் வங்கி, ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலிக்கு, ‘மொபைல் எய்டட் நோட் ஐடன்டிபையர்’ என்பதன் சுருக்கமாக, ‘மனி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம், எத்தனை ரூபாய் நோட்டு என்பதை பார்வை குறைபாடு உள்ளவர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.இந்த செயலியை, ‘இன்டர்நெட்’ இணைப்பில்லாத போதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரூபாய் நோட்டை, மொபைல் கேமரா மூலம், ‘ஸ்கேன்’ செய்தால், ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் எத்தனை ரூபாய் என்பதை ஒலி மூலம் செயலி அறிவிக்கும்.இந்த செயலி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., தளங்களில் செயல்படும் அனைத்து போன்களிலும் பயன்படுத்த முடியும்.ஆனால், இந்த செயலியை வைத்து, ரூபாய் நோட்டு போலியானதா, இல்லையா என்பதை அறிய முடியாது. இந்த செயலியை, கடந்த புதன் அன்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிமுகம் செய்தார்.இந்தியாவில், 80 லட்சம் பேர், பார்வை குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|