பதிவு செய்த நாள்
02 ஜன2020
23:55
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், நாட்டில் அன்னிய நேரடி முதலீடு, 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 2,600 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, இந்திய மதிப்பில், 1.85 லட்சம் கோடி ரூபாயாகும்.
கடந்த நிதியாண்டில், இதே ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்தில், 1.61 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே, அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது.கடந்த ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையிலான காலத்தில், சேவைகள், கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் வன்பொருள், தொலை தொடர்பு, வாகனம், வர்த்தகம் ஆகிய துறைகள், அன்னிய நேரடி முதலீட்டை அதிகளவில் ஈர்த்துள்ளன.
இந்தியாவுக்கு அன்னிய நேரடி முதலீடுகள், சிங்கப்பூரில் இருந்து அதிகளவில் வந்துள்ளன. இந்நாட்டிலிருந்து, 56 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளது.இதையடுத்து, மொரீஷியஸ், அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள், அதிகளவிலான முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|