பதிவு செய்த நாள்
02 ஜன2020
23:57
புதுடில்லி:நாட்டின் தங்கம் இறக்குமதி, கடந்த ஏப்ரல் முதல், நவம்பர் வரையிலான கால கட்டத்தில், 7 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், 1.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இதுவே, கடந்த நிதியாண்டில் இதே காலத்தில், 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
மதிப்பீட்டு காலத்தில், தங்கத்தின் இறக்குமதி சரிவடைந்ததையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 10 ஆயிரத்து, 684 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, இந்திய மதிப்பில், 7.59 லட்சம் கோடி ரூபாய். தங்கம் இறக்குமதியில், உலகளவில் முக்கியமான இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. ஆண்டு ஒன்றுக்கு, 800 முதல், 900 டன் தங்கத்தை, இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில், தங்கம் இறக்குமதி, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக் குறை ஆகியவற்றில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை, 10 சதவீதத்திலிருந்து, 12.5 சதவீதமாக, பட்ஜெட்டில் உயர்த்தி, அரசு அறிவித்தது.இதையடுத்து, ஆபரணத் துறை சார்ந்த நிறுவனங்கள் பல, தங்கள் தயாரிப்பு பணிகளை பக்கத்து நாடுகளுக்கு மாற்றிக்கொண்டு விட்டனர் என்கின்றனர், சந்தை நிபுணர்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|