பதிவு செய்த நாள்
05 ஜன2020
00:13
மும்பை:‘ரூட்’ மொபைல் நிறுவனம், புதிய பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டிக் கொள்வதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி அனுமதி வழங்கி உள்ளது.
மொபைல் தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான சேவைகளை வழங்கும் இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 600 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் போது, 240 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிட உள்ளது.
மேலும், நிறுவனர்கள் சந்தீப்குமார் குப்தா மற்றும் ராஜ்தீப்குமார் குப்தா ஆகியோரின், 360 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும் பங்கு வெளியீட்டுக்கு முன்பாக, தனிப்பட்ட ஒதுக்கீடு மூலம், 100 கோடி ரூபாய் வரை திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூட் மொபைல் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஆக்சிஸ் கேப்பிட்டல், எடல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ், ஐ.டி.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் அண்டு செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன.
இந்நிறுவனம், இதற்கு முன், ஜனவரி, 2018ல், புதிய பங்கு வெளியீட்டுக்காக அனுமதி கோரி செபியிடம் விண்ணப்பித்து, அனுமதியும் பெற்றது. ஆனால், பங்கு வெளியீட்டுக்கு வருவதை, இந்நிறுவனம் தவிர்த்து விட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|